செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!



இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே,
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் !!

தமிழ்நாடு என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை. மறைந்த புரட்டு நடிகர் ஆண்ட காலம்தொட்டு அதாவது 1976 முதல் 1989 வரை கிட்டத்த்ட்ட 13 ஆண்டுகள் அதன் பிறகு அவரது ஆசை நாயகி மறைந்த ஜெயலலிதா  1991-1996 2001-2006 மற்றும்  2011- 2016 என 15 ஆண்டுகள் அதன் பிறகு 2016 மே மாதம் முதல் செப்டம்பர் முடிய ஒரு நான்கு மாதம் என இவை அத்தனையுமே தமிழ் இனத்தை தமிழ்நாட்டினை சுரண்டி லஞ்ச லாவண்யத்தின் இருப்பிடமாக, அரசாங்க ஊழியர்களை அரசு வேலை பார்க்க விடாமல், லஞ்சம் வாங்குவதையே ஒரு வேலையாக செய்திட வைத்த பெருமை அதுவும் எதற்காக என்று கேட்டால், இந்த அரசாங்க ஊழியர்கள் வருகின்ற பொதுமக்கள், தொழில் அதிபர்கள், இவர்களிடம் இருந்து பணம் வசூலித்து அதனை முதலமைச்சர் நாற்காலியில்ந்து அமர்ந்து இருந்த இந்த அரக்கி ஜெயலலிதாவிடம் தந்து அவர் போடுகின்ற எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற பெருமை இந்திய அரசாங்கப் பனி செய்த உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அவர்கள் அனைவரையும் பணிசெய்திட விடாமல் தடுத்து நிறுத்தி அவர்களது எதிர்கால வாழ்வினையே சுருட்டி தின்ற பெருமை இந்த அரக்கி ஜெ ஒருவரையே சாரும். ஒரு வழியாக, தமிழ்நாட்டில் இனிமேல் சுரண்டுவதற்கு என்று எதுவும் இல்லாத நிலையில், சப்பிப்போட்ட மாங்கொட்டை போல ஆகிவிட்ட நிலையில், இப்போது எடுபிடி கையில் இந்த நாடு சிக்கி சீரழிந்து வருகிறது. இதற்கு புதுடில்லியின் மோடி அரசாங்கத்தின் ஆசிகள் வேறு. விளங்குமாயா நாடு.
அதனாலதான் சொல்றேன் இந்த கட்டுரைக்கு தலைப்பு தந்த மாதிரி 
இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 
என்று கூறி இந்த அளவில் கட்டுரையை நிறைவு செய்து விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

அன்புடன்.
கவிஞர் மதுரை. தி;இரா.பாலு.

செவ்வாய், 4 ஜூலை, 2017

பொண்டாட்டி தயவுக்கு மச்சினன் ........யை ........? நல்ல கதையால்ல கீது !!




பொண்டாட்டி தயவுக்கு மச்சினன் ..........யை........?அந்தக் கதையால்ல கீது !!

இன்னா நயினா !!
நல்லாக்கீரியா ( இது சென்னைத் தமிழ்- இதுக்கு 
அர்த்தம்=நல்லா இருக்கின்றாயா என்று பொருளாம்.) 

அப்பாலே இன்னா நயினா ஒரே பேஜாராக்கீது. சவாரியும் லேது ஒயிட்டினும் பண்லடா கண்ணு. அப்பாலே இன்னா நயினா பெசல்.
அடேய்..அடேய்..கபாலி. கொஞ்சம் பேசாம இருடா.உனக்காகத் தானே நானும் கிராமத்தை வுட்டுட்டு உன் ஊரு, இந்த நகரம் என்ற பெயரில் நரகத்தை பார்க்கிறேண்டா கபாலி. உம்......அப்புறம்...என்ன விசேஷம் ?
இன்னா சொல்லக்கீது. அதாம்ப்பா நம்ம தாடி நம்ம நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு வுத்துட்டாறு அதாம்ப்பா அமேரிக்கா இந்த GST வரிமுறையே அந்த கம்னாட்டி பசங்களுக்குத்தான். 
அப்பா, இனிமே என்னாடா தம்பி ஆகும் ?
இன்னா கேள்வி கேக்குற நீயும். உங்க மூஞ்சிலே என் பீச்சாங்கைய வைக்க. ஏய் கப்பல்ல பொ றப்பட்டாச்சு அமெரிக்கால இருந்து.
இனிமே நம்ம ஊரு நாட்டுலே நம்ம சாதி சனம், ஏழை பாளைங்க
நாண்டுக்கினுதான்  சாவனும்.  அவன் அமேரிக்கா காரன் ஒத்த 
ரூபாயை போட்டுபிட்டு பத்து ரூவா சம்பாரிப்பான். ஆனா அதேநேரம் 
நம்ம அண்ணாச்சி கடை வெட்டும்பெருமாள் நாடார் கடையிலே 
பத்து ரூவா முதல்போட்டு ஒத்த ரூபாகூட சம்பாரிக்கவே முடியாது.
ஆக இந்த தாடி, நாட்டை அமெரிக்க பெருமுதலாளிகள் கம்பெனிக்கு 
ஒட்டுமொத்தமா, வித்துப்புட்டான்யா. அதுல கிடச்ச ஒட்டுமொத்த 
கம்சன் பணத்தை வாங்குரதுக்கொசரத்தான் இந்த தாடி இப்ப நாலு 
அஞ்சு நாளுக்கு முன்னாடி அமேரிக்கா போயி அத்த வாங்கிக்கிட்டு,
அத ஹாலாந்து நாட்டுலே உள்ள சுவிஸ் வங்கி கிளையிலே, இவன்,
நிதி அமைச்சர்,கட்சித்தலைவர் மூணுபேருக்கும் கூட்டாக,
வேற ஏதோ பினாமி பேர்ல கணக்கு ஆரம்பிச்சு பணத்தை 
போட்டுக்கிட்டைங்க அண்ணே போட்டுக்கிட்டாயங்க. இது எப்டி 
உனக்குத் தெரியும் ? உங்க கேள்வி நியாயம்தான். இது FBI ல 
இருக்குற, என்னோட மச்சினர் மகனோட,ஒன்னுவிட்ட அக்காவோட 
தங்கச்சி பேரனுக்கு கொழுந்தியாள் பெத்தெடுத்த கடைசி 
புத்திரபாக்கியம் பேரு பாக்கியம், அவனோட சம்சாரத்தோட 
அண்ணன் மாப்பிள மைனர் மம்பட்டியான் இருக்கான்ல 
அவனுக்கு வந்து..................................................................
ஏய்..ஏய்....நிறுத்து.நிறுத்து........... உன்னோட விளக்கத்தகேட்டு 
எனக்கே இம்புட்டு கிறுகிறுத்துப்போனா பாவம் படிக்காத 
ஏழை பாளை ஜனங்க, இந்த ஜி.எஸ்.டி. எப்படிடா நடைமுறை 
படுத்த முடியும் ?
இப்ப இன்னொரு விசயமுல்ல.
அது என்னடா தம்பி ?
அண்ணே, நம்ம தாடி, இப்ப பிசாசுகளுக்கு ( சீனா,பாகிஸ்தான்)
பயந்துபோய் இவனுகள அடிக்க, செமயா மாட்டிக்கிட்டாங்க 
யார்கிட்ட ஒரு கொள்ளிவாய் பிசாசுகிட்ட ( அமேரிக்கா) இப்ப 
என்ன ஆச்சுன்னு கேட்டா, இந்த அமேரிக்கா நாடு நம்ம தாடிக்கு 
பொண்டாட்டியா மாறிக்கிச்சு. இந்த பொண்டாட்டியோட தம்பி 
(அதுதாங்க,நம்ம தாடிக்கு மச்சுனன்) யாருன்னு கேட்டா, அவன்தான் 
இஸ்ரேல் நாடு. அமெரிக்காவுக்கு நல்ல புள்ளையா ( அதாவது 
பொண்டாட்டிக்கு நல்ல புருசனா) தாடி இருக்கணும்னா, அவன் 
அதாங்க, இந்த தாடி மச்சினன்.................ய தாங்குறதுக்கு சமமா 
அந்த நாட்டுக்கு போயிருக்கான் ஐயா இந்த தாடி,கேடி. கடந்த 
25 ஆண்டுகளாக நமது நாட்டின் எந்த கட்சி பிரதமரும் இஸ்ரேல் 
நாட்டுக்கு போகாத நிலையில்தான் நம்ம தாடி அந்தக் கேடி 
நேத்து கிளம்பிட்டாரு.
இதத்தான் பொண்டாட்டி தயவுக்கு, புருசன்காரன் மச்சினன் 

.............................................ய  ?  அந்தக்கதையால்ல கீது !!
கட்டுரைய பொறுமையோட படித்த அன்புத்த்தமிழ் நெஞ்சங்கள் 
அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.

அன்புடன்
கவிஞர் மதுரை. தி.இரா.பாலு.

திங்கள், 1 மே, 2017

பொக்குவாய்க்கிழவி பொரிமாவை மெச்சிக்கொண்ட கதையால்ல இருக்குது !!



பொக்குவாய்க்கிழவி பொரி மாவை மெச்சிக்கொண்டாளாம் !!


உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற 
அன்பு உள்ளம் மட்டுமே கொண்டுள்ள எனது 
அருமைத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
நேற்றையதினம் சேலம் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகத்தின் 13 வது முதலமைச்சர் (ராசி கெட்ட எண் என்பது வரலாறு)பழனிஆண்டி மன்னிக்கவும்.....பழனிச்சாமி தனது உரையில்,என்ன சொன்னார் என்று கேட்டால் :-

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப்பணிகளும் எந்தவித தொய்வுமின்றி செவ்வனே நடைபெற்று வருகின்றனவாம்.

இவரே இதுவரை 1௦௦௦ கோப்புகளுக்கும் மேலாக இவரது கைநாட்டினை, மன்னிக்கவும் கையொப்பம் இடப்பட்டு விரைவாக அத்தனை செயல்களும் செயலாக்கப் படுகின்றனவாம். இந்தவிஷயத்தில், எதிர்கட்சிகள் முக்கியமாக, திமுக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறதாம். 
இதை இந்த புத்தர் பெருமானுக்குப் பிறகு பூமியில் அவதரித்த உத்தமர், சத்திய சீலர், இதுவரை யாரிடமும் எவரிடமும் கைநீட்டி பத்து பைசா வாங்காதவர் அப்படிப்பட்ட ஒரு நல்லவர்,வல்லவர், அனைத்து விசயங்களும் கையாள்வதில் பேர் பெற்றவர் தனது 
திருவாய் மலர்ந்து அருளி இப்படி ஒரு அப்பட்டமான புளுகு மூட்டை ஒன்றினை கட்டவிழ்த்து பேசி இருப்பது பார்த்தவுடன், கேட்டவுடன், எனது மனதில் உருவான 
கருத்துத்தான் இங்கே இந்த கட்டுரைக்கு தலைப்பாகத்தரப்பட்டு உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

பொக்குவாய்கிழவி பொரிமாவை மெச்சிக்கொண்டாளாம்.


இதில் இந்த இராசிகெட்ட அடிமை பேசியதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, நேயர்களாகிய உங்களின் முடிவுக்கே நான் விட்டு விடுகின்றேன்.

உண்மைஎன்னஎன்பதை இந்த உலகம் அறியும் !!

நன்றி !! வணக்கம் !!


அன்புடன் கவிஞர் மதுரை. TR.பாலு.

சனி, 29 ஏப்ரல், 2017

இருவர்களது கண்களில் மட்டும்வெண்ணை !! மூன்றாவது நபரின்கண்ணில் மட்டும் கந்தக அமிலத்தை தூவுவதேன் ? திரு. நரேந்திரமோடி அவர்களே !! பதில் தேவை !!



இருவர்களது  கண்களில் மட்டும்வெண்ணை !! (OPS+EPS)

மூன்றாவது நபரின்( TTV) கண்களில் மட்டும் மிளகாய்ப் பொடி தூவுவதேன் ?

மத்திய அரசே !!   நமது  இந்தியத் திருநாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே !!

கட்டாயம் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அவசியம் பதில் சொல்லியே ஆகவேண்டும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம் !!.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழ்நாட்டில் நியாயமான முறையில் பிரச்சாரங்கள் செய்துகட்சியை ( பாரதிய ஜனதா) உழைத்து கஷ்டப்பட்டு,வளர்க்க,அதன் வழியாக காலூன்றி நின்று, அரசியல் நடத்திடஇயலாத
(காங்கிரஸ் கட்சி அந்தக்காலங்களில் 1971முதல் இதேபோலத்தான்  செய்து, ஒன்று திமுக இல்லையென்றால் புரட்டு நடிகர் MGR வளர்த்த அஇஅதிமுக என மாறி மாறி அவர்களின் தோள்களில் அமர்ந்து சவாரி செய்து
உழைக்காமல், பிரச்சாரங்கள், கூட்டங்கள்,நல்ல பேச்சாளர்களை உருவாக்கி வளர்த்து அவர்களை வைத்து  கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்தி, செயல்பட்டு கஷ்டப்பட்டு, உழைத்து கட்சியை வளர்க்காததன் விளைவு !!

இன்னைக்கு என்ன ஆச்சு ?

அகில இந்திய அளவிலேயே கட்சி தனது செயல் திறனை இழந்து இன்று இந்தியாவை விட்டே அழிந்து போகக் கூடிய நிலையில் மட்டுமே காங்கிரஸ் கட்சி உள்ளது. அதே நடைமுறையைத் தான் இன்றைய தினம் பி ஜேபி கட்சியும்,உழைக்காமல்,பாடுபடாமல், கூட்டங்கள் நடத்தாமல், கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லாமல் பின்வாசல் வழியாகஎப்படியேனும்ஆட்சிசெய்திட வேண்டும் என்று துடிக்கும் பி.ஜே.பி.யின் அணுகுமுறை, எப்போதும்வெற்றிபெறவே முடியாது.

இலஞ்சம் இலாவண்யம் மட்டுமே செய்து பல காரணங்களால் ஆளும்அஇஅதிமுக கடந்த புரட்டுத்தலைவர் MGR ஆட்சிசெய்த13 ஆண்டுகள்
( 1976-1989) அதன் பிறகு இடையில்கிட்டத்தட்டஇரண்டு ஆண்டுகள்,
(1989-1991) முத்தமிழ்அறிஞர் கழகத்தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி, அது ராஜீவால் அப்போது பிரதமராக இருந்த மறைந்த சந்திரசேகரிடம் உத்திரவு தரப்பட்டு அது ஜெ ராஜீவிடம் ஆணையிட்டு அவரது ஆணைக்கு இணங்க, உத்திரவிற்கு அடிபணிந்த, ( ஏன் ஜெ யின் ஆணை, உத்திரவு, இதற்கு ராஜீவ் சம்மதம் தெரிவிக்க வேண்டும் ? என்ற உங்களது கேள்வி என்னவோ நியாயமானதுதான். அதற்கான விடையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.   அதனை இங்கே எழுதுவது அவை நாகரீகம் ஆகாது. அதனால் விடையை என்னால் எழுதிட இயலவில்லை.) ராஜீவ்காந்தியின் மரணத்தால் அந்த அனுதாப அலையால் ஆட்சியைக் கைப்பற்றிய  MGRன் ஆசை நாயகி"செல்வி" (இதன் பொருள் என்னவென்றால் திருமணம்ஆகாதவர்,குழந்தை பெறாதவர் என்று பொருள். ஆனால்இது உண்மையா? இல்லையா ? என்பது சம்பந்தப்பட்டமறைந்த ஜெ யின் மனசாட்சி, மற்றும் நடைபெறும் அத்தனை
நிகழ்வுகளையும் விண்ணுலகிலிருந்து பார்த்துக்கொண்டுஇருக்கும் இறைவன் ஒருவனும் மறைந்த தெலுங்கு திரையுலகின்
முன்னணி நடிகர் சோபன்பாபு,உட்பட அனைவருமே  அறிவார்கள் )

இந்த புரட்டுத்தலைவி ஜெயலலிதா ஆட்சி புரிந்து, அதன் காரணமாக அதுவரை  தலை நிமிர்ந்து அதுவரை வாழ்ந்திருந்த தமிழ் நாட்டை
இவர் ஆட்சி செய்து பாழடித்து, சீரழித்து, தனது வருமானம், நிர்வாகத்தின் மூலமாக எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, இலஞ்ச இலாவண்ய,ஊழல் முறைகேடுகள் வாயிலாக சொத்துக்கள், சுகங்கள், ரொக்கப் பணங்கள் என இந்திய நாட்டின்  தலைமை வங்கியான ரிசர்வ் வங்கிக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கோடானு கோடிகள்  சேர்த்துக் குவித்த, தான்
ஆட்சி செய்த ( 1991-1996, 2001-2006, 2011-2016, 2016 ல் 6 மாதங்கள் என கிட்டத்தட்ட  29 ஆண்டுகள்இந்த தமிழகத்தை, அதன் வளத்தை, நலத்தை,
வருமானத்தை,செல்வ சுகங்களை, கொள்ளையடித்த கும்பல்கள் மட்டுமே
இன்று இரண்டு,மூன்று,நான்கு என்று குழுக்களாக, பிரிந்துஅதிகார போட்டி
நடத்திக்கொண்டு, யார்கொள்ளைக்கூட்டத்திற்கு தலைவராக இருப்பது ?
இதில்தான் இவர்கள் கவனம் இன்றையதினம் சென்று கொண்டிருக்கிறதே ஒழிய,தமிழ் நாட்டின் எந்தமுன்னேற்றப் பணிகளிலும் இவர்கள் இதுவரை ஈடுபட்டதாக எந்த( அது  OPS ஆகட்டும் அல்லது EPS ஆகட்டும் ) வரலாறு
என்பது இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

கடிக்க வருகின்ற நாய்களின் கூட்டத்திற்கு (வாக்களிக்கும் மக்கள்)ஒரு சில சூப்பிப்போட்ட எலும்புத்துண்டுகளை ( வாக்கிற்கு
பணம், பிரியாணி பொட்டலம்,குவார்ட்டர் பாட்டில்,சேலை துணிமணி
எவர்சில்வர் பித்தளை பாத்திரங்கள் என)வீசி எறிந்து விட்டு தமிழ்நாடுமுழுவதையுமே கொள்ளையடித்து குவித்த பணங்களை, மறைந்த தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த செல்வி ( அப்படி அழைப்பது தவறு)
ஜெ மற்றும்அவரது " ஆருயிர்த் தோழி "- ( இந்த இரு வார்த்தைகளுக்கு
வாசகர்களாகிய நீங்கள் என்ன பொருள் வேண்டுமானாலும், எப்படி அர்த்தங்கள் எடுத்து உரைத்தாலும் அது, உங்களது தனிப்பட்ட கருத்து.
அதில் தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை) திருமதி சசிகலா அவர்களும்இணைந்து,சேர்ந்து,கூட்டுக்கொள்ளை அடித்து குவித்து வைத்திருந்த   கொடநாடு தேயிலைத்தோட்ட அரண்மனையில்,
பதுக்கி வைத்திருந்த பல்லாயிரம் கோடிகள் ரொக்கப் பணமாக,தங்கநகைகளாக, சொத்துப்பத்திரங்களாக, இன்னும் இத்யாதி இத்யாதி குறிப்பிட்டுத்தான் எழுதிட வேண்டுமென்றால், அதற்கு இந்த நாளும்
போதாது,இடமும்பத்தாது....................................................


(தொடரும்)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். கவிஞர் மதுரை. T.R.பாலு.

புதன், 29 மார்ச், 2017

சென்னை R.K.நகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக வாக்காளர்கள் விழிப்புணர்வு கட்டுரை இது !!


சென்னை RK நகர் 


வாக்காளப்பெருமக்களே !!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய 

காலை வணக்கங்கள் உரித்தாகுக.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
தமிழகத்தில் இருக்கின்ற சட்டமன்றத் தொகுதிகள் என்னவோ 234 தான். ஆனால்அவர்களுள் எந்தத் தொகுதிக்கும் கிடைக்காத மாபெரும் அதிருஷ்டமும் ஆனந்தமும் உங்களது தொகுதியான RK நகர் சட்டமன்றத் தொகுதிக்கு  மட்டுமே எல்லாம் வல்ல இறைவன் அளித்திருக்கிறான். எப்படி என்று கேட்டால் நடப்பு சட்டமன்ற நிலவரத்தின்படி ஒரே ஒரு ஆண்டிற்குள் இரண்டுமுறை தேர்தல்கள். அதில் ஒன்று முறைப்படி. ஆனால், மற்றொன்றோ இடைத் தேர்தல். எப்படி உங்கள் அதிருஷ்டம் வாக்காளப் பெருமக்களே. இதே நிலைதான் சென்ற முறையும். மறைந்த ஜெ 2011 சட்டமன்றத்தேர்தலில் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் நின்றார். "தரவேண்டியதைத் தந்து" பின்பு பெற வேண்டிய வெற்றியைப் பெற்றார். இவருடைய வழக்கமான தேர்தல் அணுகுமுறையே இதுதான். 2015ல் சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற நீதியரசர் திருமிகு மைக்கேல் D.குன்ஹா அவர்களால் முதல் குற்றவாளி ( Accused- 1) என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1௦௦ கோடி ரூபாய் (கோடி என்பது நம்மைப் போன்ற சாதாரண, நடுத்தர மற்றும் உயர் வகுப்பினைரில் வேட்டியிலும் தெருக்கோடியிலும் மட்டுமே) அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் ஜெ,தோழி சசிகலா,இவரது அண்ணன் மனைவி இளவரசி, இவர்களோடு எருமை மாட்டு வயசில் தத்து எடுத்துக் கல்யாணம் கின்னஸ் ரிக்கார்டில் இடம்பெற்றவர் திரு.சுதாகரன் ஆக இந்த நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, பெங்களூரு உயர்நீதிமன்ற நீதி(?) அரசர் குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்டதால் மீண்டும் உங்களது RK நகர் தொகுதியில் நின்றார் ஜெ. வென்றார் ஜெ.( தொடரும்.......................)

சனி, 11 மார்ச், 2017

அகில இந்திய BJP கட்சிக்கு ஒரு சிறு அறிவுரை !! அந்தப் பருப்பு தமிழ்நாட்டு தண்ணியிலே வேகவே வேகாது !!




அந்தப்பருப்பு இந்த தமிழ்நாட்டு தண்ணியிலே
வேகவே வேகாது !! எத்தனை யுகங்கள் ஆனாலும் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத்
தேர்தல் இறுதி நிலவரங்கள் ஒவ்வொன்றாக,
வெளிவந்துகொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில்உங்களை நான் இந்தக் கட்டுரையின் மூலமாகசந்திப்பதில் மிகவும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில் இந்தத் தேர்தல் முடிவுகள், ஒன்றே ஒன்றைமிகமிகத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுவதாகவேஎன்போன்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகஇந்தியத் திருநாட்டின் அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும்ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் ஆர்வலர்கள்கருத இடம் இருக்கிறது. அது என்னவென்றால், இதுவரை
ஆண்டுகொண்டிருந்த அத்தனை கட்சிகளையும்
மக்கள் புறக்கணித்துவிட்டு அங்கே ஓரளவு எதிர்க்கட்சிகளாகஇருக்கும் கட்சிகளில், வலிமை மிக்க கட்சியை மட்டும்
வெற்றிபெற வைத்து அங்கே ஆளும்கட்சியாக, ஆள்வதற்குதகுதி உள்ள கட்சிகளாக, அந்தந்த மாநில மக்கள் அங்கேஅங்கீகாரம் தந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. அதாவது
BJP இதுவரை ஆட்சி புரிந்த மாநிலங்களான பஞ்சாப் மற்றும்GOA, இவை இரண்டிலும் அந்தக் கட்சி மக்களால் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. அங்கே எதிர்கட்சியாக இருந்த இந்திய தேசிய 
காங்கிரஸ் கட்சி ஆளும்கட்சியாக அந்த மாநில மக்களால்அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அதே நேரம் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திராகன்ட்ஆகிய இரு மாநிலங்களில், ஆளும் கட்சியாக இருந்த முறையே முலாயம்சிங் கட்சியும் மற்றும்காங்கிரஸ் கட்சியும்மக்களின் முழு நம்பிக்கையை இழந்து விட்டதனால், அங்கே எதிர்கட்சியாக இருந்த BJP கட்சிக்கு, அந்தந்த மாநில மக்கள் மீண்டும் நல்லதொரு 
வாய்ப்பினை நல்கியுள்ளார்கள் ஒருவேளை இவர்களாவது அந்த மாநில மக்களின் கஷ்டத்தை, வறுமையை போக்கி 
நல்லதொரு வாழ்க்கையை தருவார்கள், என்ற நம்பிக்கையை அம்மாநில மக்கள் மனதில் வைத்ததனால். மற்றபடி, தமிழக பி.ஜே.பி. கட்சியின் மாநிலத் தலைமை, திருமதி. தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் இப்போது தொலைக்காட்சியில்,வாய்கிழிய பேசி வருகிறாரே :-

நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள் !!
இனிமேல் மக்கள் பாரதீய ஜனதாவை மட்டுமே இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்க முடிவெடுத்து விட்டார்கள் !!

இந்திய ரூபாய் மதிப்பு குறைப்பு மற்றும் 5௦௦ ,1,௦௦௦ ருபாய் மதிப்பை செல்லாததாக ஆக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள் !!

இந்த வெற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்புக்கு, இந்திய மக்களின் மீது திரு.மோடி அவர்கள் கொண்டுள்ள கரிசனத்துக்கு, நம்பிக்கைக்கு,கிடைத்த வெற்றி !!

அப்படி, இப்படி என்று தமிழிசை பேசிவருவதை இங்கே நமது தொலைக்காட்சியின் நேரலை நிகழ்சிகளில் பார்க்கின்றபோது, எனக்கு தலையில் அடித்துக்கொள்ள எனக்கு இரண்டு கைகள் பத்தவே பத்தவில்லை என்பதை 
இங்கே நான் மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

உடனே தமிழிசை அவர்கள், தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களில், எங்களது உத்திரப்பிரதேசத்தில் நாங்கள் பெற்ற வெற்றி போலவே தமிழகத்திலும் பி.ஜே.பி.
வென்று, தமிழ்நாட்டின் அடுத்த ஆளும் கட்சியாக வந்தே தீரும் என்றெல்லாம் உளறித்திரிவதைதயவுசெய்துநிறுத்திக்கொள்ளுங்கள் தமிழிசை அவர்களே. நீங்கள் 
உண்மை நிலைமை, தெரியாமல் உளறுகிறீர்களா ?

அல்லது இப்படி எல்லாம் கப்சா வுட்டு, தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை ஏமாற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போடுகிறீர்களா ?

இந்த இரண்டில், நீங்கள் எதை நினைத்து செயல்பட்டாலும் உங்களுக்கு ஏற்கனவே கிடைத்த தோல்வியைவிட இன்னும் படுமோசமான தோல்வியை மட்டுமே தமிழக 
மக்கள் பி,ஜே.பி. கட்சிக்குத்தருவார்கள் அதில் எனக்கு எள்ளின் முனையளவுகூட ஐயம் இல்லவே இல்லை.

ஏன் நான் இதனைச் சொல்கிறேன் என்றால், தமிழக மக்களை அந்த அளவுக்கு நீங்கள் பல்வேறு விஷயங்களில் அவர்களின் மனத்தைக் காயப்படுத்தி, ரணப்படுத்தி,உதிரம் வடியும் நிலைக்குத் தள்ளி இருக்கிறீர்கள். அதை 
மறந்து விடாதீர்கள் திருமதி. தமிழிசை அவர்களே.

தமிழக மக்கள், உங்களையும் உங்கள் கட்சியையும் ஏன் புறக்கணிக்கக் காத்திருக்கிறார்கள், என்ற பல 
காரணங்கள், உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

அதனாலதான், அந்தக்கன்றாவிகளை, நான், இங்கே மீண்டும் எழுதி, எனது பொன்னான நேரத்தை, வீணடிக்க விரும்பவில்லை. தமிழிசை அவர்களே !! நீங்கள் குன்னக்குடிக்கு, அன்னக்காவடி எடுத்தாலும் சரி,
இல்ல, பழனி முருகனுக்கு, பாத யாத்திரை சென்றாலும் சரி, இல்ல திருப்பதி ஏழுமலையானுக்கு தங்கப் பல்லாக்கு தூக்குவதாக, வேண்டிக்கொண்டாலும் 
சரி, உங்களது பி.ஜே.பி. கட்சி, தமிழகத்தில், ஆளும் கட்சியாக வரும் என்று கனவில்கூட நினைக்காதீர்கள்.

ஆகவேதான் இந்தக் கட்டுரைக்கு நான் தந்துள்ள தலைப்பு :-

அந்தப் பருப்பு !! இந்தத் தமிழ்நாட்டுத் தண்ணியிலே என்னாளும் வேகவே வேகாது !!

என்று சொல்லி உங்களை எச்சரிக்கை செய்வதுதான் எனது இந்தக் கட்டுரையின் மூல நோக்கம்.

நன்றி !!வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

திருமதி தமிழிசை அவர்களே !!

ஆங்கிலப் பழமொழிகள் இந்த இரண்டினை   மட்டும் நீங்கள் எந்நாளும் மறந்து விடாதீர்கள் !!

1)  IF DESIRES ARE HORSES,
BEGGARS WOULD DRIVE !!

2) THEY ARE AT THE FOOLS PARADISE !!

தமிழ் அர்த்தம் :-

1)  எண்ணங்களே குதிரைகள் என்றால், கேவலம் 
ஒரு பிச்சைக்காரன்கூட அதில் அந்தக் குதிரை மீது ஏறி  சவாரி செய்திடலாம்.

2) இப்படி பேசுபவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறார்கள் !!

சனி, 11 பிப்ரவரி, 2017

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!





மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1964 ம் ஆண்டு. தமிழ் சினிமா உலகில்
முடிசூடா மன்னனாக, முத்தமிழ் அறிஞர்
கழகத்தலைவர் கலைஞர் அவர்களால்
புரட்சி நடிகர் என்று பட்டம் பெற்ற மலையாள
தேசத்தில் பிறந்த நடிகர் M.G.இராமச்சந்திரன்,
மற்றும் அவரது அலுவலக மேலாளர் திரு. R.M. வீரப்பன் இருவரது கூட்டுத்தாயரிப்பில் சத்யா மூவிஸ் என்றபெயரில்  வெளிவந்த கருப்பு வெள்ளைதிரைப்படம்தான்

தெய்வத்தாய்

என்ற திரைப்படம் ஆகும்.மறைந்த காவியக்கவிஞர்வாலி, ஆலங்குடி சோமு இவர்கள் இருவரும் இந்தபடத்தின் பாடல்களை இயற்ற, மறைந்த மெல்லிசைமன்னர்கள் MS.விஸ்வநாதன் & இராமமூர்த்தி இருவரது
இன்னிசையில் பல்வேறு சிறப்பான பாடல்கள்
அந்தப்படத்தில் இடம்பெற்றன. அதில் தற்போது
தமிழகத்தில் நிலவி வருகின்ற அரசியல் சூழலுக்குஏற்ப ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அதனை முதலில்உங்களுக்கு சொல்லிவிட்டு அதன் பின்பு கட்டுரையைஎழுதிடத் துவங்கலாம் என்று எண்ணி உள்ளேன் எனதுஅன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இதோ இதுதான் அந்தப்பாடல் :-

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!-அது 
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் !!
உள்ளம் என்றொரு ஊரிருக்கும் !!-அந்த 
ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் !!

பொதுவாக, மூன்றெழுத்துக்கள் கொண்ட 
எந்த ஒரு சொல்லாக இருந்தாலும் அதில் 
மனித இனத்திற்கு ( அது ஆணாகவோ அல்லது 
பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி )
ஒரு தணியாத மோகம், மயக்கம், அடைவதில் 
ஒரு வெறித்தனமான உணர்ச்சி, எப்பாடுபட்டாவதுஅதனை பெற்றிட வேண்டும் என்றொரு துடிப்போடு கூடிய ஒரு செயல்பாடு, இது போன்ற இன்னும் சொல்லிடமுடியாத, சொல்லில் அடங்காத பல்வேறு உணர்வு பூர்வமானவிஷயங்கள்அந்தமூன்றுஎழுத்துக்கள்
கொண்ட சொல்லில் அடங்கி இருப்பது கண்கூடு.

உதாரணமாக, சொத்து,சுகம்,காதல்,பணம்,பவிசு,
பதவி,அன்பு,இதுபோல இன்னும் எத்தனையோ 
இந்த மூன்றெழுத்து மந்திரத்தில்அடங்கியுள்ளது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இன்றையதினம், நமது தமிழகத்தைப் பொறுத்தவரைபதவி என்ற அந்த மூன்றெழுத்துக்கு நடைபெற்று 
வருகின்ற குடுமிபிடி சண்டையைப் பார்க்கின்றபோது அழுவதா ? அல்லது சிரிப்பதா ? தெரியவில்லை.

மறைந்த எனது அன்புத்தந்தை அடிக்கடி ஒரு 
சொற்றொடரை சொல்வதுண்டு. அது என்னவென்றால்:-

நாய் வேலையை நாய் பார்க்கவேண்டும் !!
கழுதை வேலையை கழுதை பார்க்க வேண்டும் !!

என்று. இந்த வாசகத்தின்படி நமது தமிழக வாக்காளப் பெருமக்கள் செயல்படாமல், நடிகரையும் அவரது ஆசைநாயகி நடிகையையும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்ததன் விளைவு ? இந்தப்பதவி சண்டை என்பதே எனது கணிப்பு.

ஒருவர் மருத்துவர் ஆகா வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் படித்து அதன் பிறகு ஓராண்டு உள்மருத்துவராக (House Surgeon )பணியாற்றி அதன் பிறகே முழு அந்தஸ்த்து பெற்ற ஒரு 
மருத்துவராக பணியாற்றிட இயலும். 

இதுபோலவேதான் ஒவ்வொரு துறைகளும், அது பொறியாளர் ( Engineer) அல்லது வழக்கறிஞர் (Advocate) கல்வியாளர்கள், இதுபோல ஒவ்வொரு 
துறைக்கும் அதற்கென்று படித்து, அனுபவம் பெற்று, அதன்பிறகே அவர்களது தொழில் அங்கீகாரம் பெற்று அவர்கள் பணிபுரிந்திட 
அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் ஆளுகின்ற பொறுப்புக்கு வருகின்றவர்களுக்கு, இதுபோன்று 
எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், வயது மட்டும் இருந்தால் அதுமட்டும் போதுமானது என்ற காரணத்தால், அரசியலுக்கு வருகின்ற நிலைமை, இந்த நாட்டில் நீடிக்கின்றவரை, இதுபோல் நடிகர்களும் நடிகையர்களும், அந்த நடிகையின் ஆயாக்களும் பொறுப்புக்கு வந்து 
மக்களின் பல்லாயிரம் கோடிகள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து கோலோச்சுவதை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் தடுத்து நிறுத்திடவே இயலாது. 

ஒரு தகுதி,திறமை,அன்புவம் பெற்ற, பலவருடங்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டு, போராட்டங்கள் பல கண்டு, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறைக்கு சென்று பொதுநலத்திற்கு பாடுபட்ட  அரசியல்வாதி 
மட்டுமே அரசாள வேண்டும், அரசாள முடியும் என்று சட்டம் எப்போது திருத்தப்படுகிறதோ அன்றுதான் இந்த நாடும் உருப்படும் ஒரு ஒழுக்கம் உருவாகும் சிறந்த ஆட்சி நிர்வாக 
நெறிமுறை, இந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கும் 

அதுவரை பொறுமனமே !!பொறு !! என்று கூறி கட்டுரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.