பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு-அலேக்கும் !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
அது 1968ம் ஆண்டு. சத்யா மூவீஸ் தயாரிப்பில்
வெளிவந்த கருப்பு வெள்ளைத் திரைப்படம்தான்
கண்ணன் என் காதலன்.
அந்தக்கால புகழ் பெற்ற இயக்குனர் மறைந்த
ப.நீலகண்டன் இயக்கத்தில், வாலி, ஆலங்குடி
சோமு ஆகியோரின் கவிதை மழையில்,
மெல்லிசை மன்னர் திரு M.S. விஸ்வநாதனின்
தேனினும் இனியஇசையில்வெற்றிநடைபோட்ட
படம்அது.அந்தப்படத்தில்வாலியின்பாடல்ஒன்று.
அது என்னவென்றால் :-
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் !!
டக்கு முக்கு டிக்குத் தாளம் !!
எட்டு நாளிலே புரிஞ்சுபோகும் !!
டக்கு முக்கு டிக்குத் தாளம் !!
அம்மம்மம்மா !! இவள் ஒரு பொய்ப்பிறவி !!
அம்மம்மம்மா !! இவள் ஒரு புதுப்பிறவி !!
என்று ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். என்னே
ஒரு தீர்க்கதரிசனம் !! ஏறத்தாள இன்றைக்கு 47
ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்பார்த்து உள்ளார்
புரட்சி நடிகர் M.G.R. என்னவென்றால், தனக்குப்
பின்னால், தன்னால் உருவாக்கப்பட்ட அண்ணா
திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை
பின்வாசல் மூலமாகக் கைப்பற்றி அதன் மூலம்
தனது ஏவல் தளமாக மாற்றி, ஆட்சி, மற்றும்
அதிகாரத்தை கைப்பற்றி தனது வருமானத்திற்கு
அதிகமாக சொத்து சேர்த்து கீழ் நீதிமன்றத்தால்
தண்டனை பெற்று அதன்பின்னர் மேல்முறையீடு
செய்திட உயர்நீதி மன்றத்தை அணுகி அங்கே
பொய்யும் புரட்டும் செய்து விடுதலை பெற்று
அந்தத் தீர்ப்பு வெளிவந்த இரண்டொரு நாளில்
ஜெயலலிதா செய்தபொய்கள்புரட்டுக்கள்இங்கே
வெளியுலகத்திற்குதெரியவந்தேதீரும்என்பதை
எப்படி தெரிந்து இந்தப் பாடலை தனது படத்தில்
புரட்சி நடிகர் இடம் பெற வைத்துள்ளார்என்பதை
எண்ணிப்பார்க்கின்ற பொழுது எனக்கு மெய்
சிலிர்க்கின்றது
உலகத் தமிழர்களே !! உங்களது கவனத்திற்கு
நான் இந்த செய்தியை தருகின்றேன்.
சிந்தியுங்கள்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
( மதுரை T.R. பாலு )