செவ்வாய், 25 அக்டோபர், 2016
மெல்ல மெல்ல மோடி பக்கம் சாய்கிறதா ? தமிழக அரசு !!
எப்படி என்றால் :-
1) முதல்வர் அவர்கள், இதுநாள்வரையிலும் மிக மிகக் கடுமையாக எதிர்த்து வந்த " உதய் "
2) அடுத்தது என்னவென்றால், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு," நீட் " என்ற நுழைவுத் தேர்வை முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தில் அமல் படுத்தக்கூடாது என்பதில் மிகவும் அழுத்தமாக இருந்த நிலைமை மாறி, நேற்று அந்த கல்வித்துறை அமைச்சர் டெல்லி சென்று, அங்கேயும் வலுவிலே சென்று முந்தி விரித்த கதையாக, நீட் தேர்வு எழுத பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கட்சி விட்டு கட்சித்தாவி வந்த அமைச்சர் மா.ஃபா.
வெள்ளி, 7 அக்டோபர், 2016
" மரணம் " இதைத் தவிர்க்கவே முடியாதா ? மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா பாடிய பாடல்!!
மனிதனால் தவிர்க்க முடியாதது
" மரணம் "
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த
மாலை வணக்கங்கள்.
மறைந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய
பாடல், " பாவமன்னிப்பு " திரைப்படத்தில்
இடம்பெற்றது.
பறவையைக் கண்டான் !!
விமானம் படைத்தான் !!
பாயும் மீன்களில் !!
படகினைக் கண்டான் !!
எதிரொலி கேட்டான் !!
வானொலி படைத்தான் !!
என்ற வரிகளில் மனித இனத்தின் அதியற்புத
படைப்பாற்றலை புகழ்ந்திருந்தார் கவியரசர்.
இவ்வளவு திறமை கொண்ட மனித இனத்தால்
மரணத்தை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது
தள்ளிப்போடவோ முடிந்ததா ? என்றால் இன்று
மருத்துவ விஞ்ஞானம் வெகு வேகமாக பெருகி
வளர்ந்துள்ள சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள
விஷயம் என்பது ஓரளவு சாத்தியமாகத்தான்
உள்ளதே தவிர, முற்றிலும் மரணத்தைத் தள்ளிப்
போட யாருக்கும் அதிகாரம் இல்லை, ஏனென்றால் அது நம்மைப்படைத்த பரம்பொருளின் கைகளில் வைத்துக்
கொண்டிருக்கும் ஒரு " வீட்டோ " சக்திதான்
என்பது முற்றிலும் உண்மை. உண்மையைத்
தவிர வேறு ஒன்றும் இல்லை.
கிறிஸ்த்துவ மதம் என்ன சொல்லுகிறது என்றால் :-
பாவத்தின் சம்பளம் " மரணம் " என்று.
நம் கழகத் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான் வசனம் எழுதிய "மனோகரா "திரைப்படத்தில் என்ன சொல்லியுள்ளார் எனில்:-
கடலிடை துரும்பம்மா !!
மனித வாழ்வு !!
என்று.
மறைந்த கவியரசர், நடிகர் திலகம் மறைந்த
சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "தெனாலிராமன்"திரைக்காவியத்தில் :-
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள் !!
சொல்லாமல் போவார் அல்லாவிடம் !! -அவர்
முன்னாளில் சேர்த்த செல்வங்களாலே !!
பின்னோர்கள் சந்தோசம் கொண்டாடுவார் !!
என்று எழுதியிருந்தார்.
மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா மரணத்திப் பற்றி, அதன் உண்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக விளக்கிக்கூறும் விதமாக ஒரு பாடல்ஒன்று பாடியிருப்பார்.
அதுஎன்ன என்றால் :-
மவுத்தையே (மரணம்) நீ மறந்து வாழலாகுமா ?
மாறிடும் பூமியில் நீந்துதல் நியாயமா ?
மன்னாதி மன்னர் எல்லாம் நிரந்தரமாய்
இருந்ததில்லை !!
மகத்தான முறையில் வாழ்ந்த !!
மனிதரெல்லாம் நிலைத்ததில்லை !!பொன்னான செல்வந்தரும் !!
பூவுலகில் நிலைத்ததில்லை !!
பூவுலகின் இன்நிலையை புரிந்திடாமல் !!
பிதற்றுகிறாய் !!
( மவுத்தையே )
நிச்சயம் மரணம் வரும் !!
நீ ஒரு நாள் இறந்திடுவாய் !!
நேசரெல்லாம் அழுதபின்னே !!
நீ செந்தூக்கில் ஏறிடுவாய் !!
அச்சான கபர்ஸ்தானில் ( புதைகுழி) !!
நீ அடங்கி மண்ணாவாய் !!
அந்நாளை எண்ணிடாமல் நீயும் !!
ஏனோ பிதற்றுகிறாய் !!
( மவுத்தையே)
என்று அன்னார் பாடிய அந்த மிக அற்புதமான அந்தப்பாடல் என் சிந்தனையைக் கவர்ந்திருந்தது அந்நாளில்.
அது சரி. அதை ஏன் இப்போது இங்கே நான் கட்டுரை வடிவத்தில் தருகிறேன் ? என்று வாசகர்களாகிய நீங்கள் உங்கள், புருவங்களை உயர்த்தி என்னைப்பார்த்து கேள்வி எழுப்புவது என்னால் இங்கிருந்தே அறிந்திட முடிகிறது என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
தற்போது தமிழகத்தில் நிலவுகின்ற ஒரு சற்றும்
எதிர்பாராத ஒரு அசாதாரணமான சூழலுக்காக
நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன் என்று
உங்களில் யாராவது நினைத்தால் நிச்சயம் அதற்கு நான் முற்றிலும் பொறுப்பல்ல.
அதற்காக நான் இங்கே கட்டுரை எழுதிட முன்வரவில்லை. மனித வாழ்வின்
நிச்சயமற்ற உண்மையை, வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிட வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமில்லை அன்புத்தமிழ் நெஞ்சகளே !!
மறைந்த என் அன்புத் தந்தை அவர் பேசும்போது
தவறாமல் இந்த வாசகங்களை அடிக்கடி நினைவு படுத்திப் பேசுவது அவரது வழக்கம்.
மனிதன் இருப்பது பொய் !!
அவன் இறப்பது மெய் !!
இந்த பூமியில் நாம் வாழ்ந்து
மடிந்துபோகும் வரையில், நாலு பேருக்கு நம்மால் முடிந்த அளவு ஏதாவது நன்மை செய்து மறைய வேண்டும் !!.
ஊரை அடிச்சு உலையில் போட்டு பணம்
சேர்க்கவே கூடாது !!
நாலு பேர் வாயில் நாம் தவறிக்கூட கெட்டபெயர்
சம்பாதிக்கக் கூடாது !!
உழைத்து பணம் ஈட்ட வேண்டும் !!
குறுக்குவழியில் பெரும் பணம் கூடிய
விரைவில் நம்மை அழித்துவிடும் !!
என்றெல்லாம் அறிவுரைகள் சொல்லி சொல்லியே, எங்களை வளர்த்திருந்தார் எங்கள் அன்புத்தந்தை.அந்த எண்ணங்களை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசிவதை தடுக்க இயலவில்லை என்றுசொல்லி,இந்தக்கட்டுரை தனை நிறைவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
லேபிள்கள்:
அரசியல் அலசல்,
கட்டுரை,
கடவுளின் தீர்ப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)