வியாழன், 22 டிசம்பர், 2016

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டம்தான் என்ன ? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் !!



பாரதீய ஜனதா கட்சியின் திட்டம்தான் என்ன ? ( தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் )



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.

மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 
மறைவிற்குப் பிறகு, எப்படியாவது தமிழகத்தில் 
காலூன்றிட வேண்டும், அதிலும் குறைந்தஅளவு 
இரண்டாம் இடம் கிடைக்காவிட்டால்கூடப் 
பரவாயில்லை, மூன்றாவது இடமாவது இங்கே 
கிடைத்தால் போதுமானது அதை வைத்துக்கொண்டு அடுத்து அடுத்து முயற்சி செய்து இரண்டாவது இடத்தைக் கைப்பற்றிவிடலாம், என்ற மனக்கணக்கில் 
முழு நம்பிக்கை வைத்து இங்கே சித்துவிளையாட்டில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி.யின் கனவு நமது தமிழகத்தைப் பொறுத்தவரையில், நனவாகுமா என்பதே 
இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

1967ம்ஆண்டிற்குப்பிறகுதமிழகத்தைப்பொறுத்தவரைதேசியக் கட்சியான காங்கிரஸ் வேரோடும் வேரடி மண்ணோடும் இங்கே புதைகுழிக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதன்பிறகு அந்தக் காங்கிரஸ் கட்சி 1971ம் ஆண்டில் மறைந்த இந்திராகாந்தியின் புண்ணியத்தால், ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாங்கிரஸ் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஸ்தாபன காங்கிரஸ் மறைந்த பெருந்தலைவர் காமராஜ் தனக்குப் 
பிறகு அடுத்த தலைமுறையை உருவாக்கி வைக்காமல் தனக்கு உள்ள முக்கியதத்துவம் எங்கே குறைந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக செயல்பட்டதன் விளைவு அந்தக் 
கட்சியே அவரது மறைவிற்குப்பிறகு காணாமல் போய்விட்டது இது வரலாறு நமக்கு உரைத்திடும் உண்மை.
( இதே கொள்கையைத்தான் இங்கே மறைந்த அம்மையார் ஜெயலலிதாவும் கடைப்பிடித்தார் அதே போல அவரது அதிமுக என்ற கட்சியும் நெல்லிக்காய் மூட்டையை பிரித்தால் எப்படி சிதறியோடி பறந்துவிடுமோ அதுபோல 
உடைந்து சிதறி சின்னாபின்னமாகி காணாமல் கரைந்து போகப்போவது எதிர்காலம் நமக்கு எடுத்துரைக்க இங்கே காத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை)

சரி. நாம் இப்போது விஷயத்திற்கு வருவோம். 

இங்கே இரண்டு பெரும் சக்திகள் உள்ளன தமிழகத்தைப்பொறுத்தவரையில். ஒன்று திராவிட முன்னேற்றக்கழகம் மற்றொன்று அஇஅதிமுக. இந்த இரண்டில் ஒன்றை 
அழித்தால் மட்டுமே பாரதீய ஜனதா கட்சி இங்கே அந்த இடத்தைப் பிடித்து அரசியல் செய்திட முடியும் என்கின்ற நிலைமை இங்கே தமிழகத்தில். அப்படி பார்க்கின்றபோது 
திமுக என்பதுஒருஎஃகுக்கோட்டை.விழுதுகளின் முழு பலத்துடன் ஓங்கி பறந்து விரிந்துள்ள ஒரு உண்மையான அரசியல் பாரம்பரியத்துடன் வளர்ந்த கட்சி. அதை அசைக்க கனவினாலும் இந்த டெல்லி ஆரிய இந்துமதவாத சக்தி 
என்பதன் மறு உருவமாக செயல்படும் பி.ஜே.பி. யால் ஒரு இம்மியளவுகூட அசைக்க முடியாது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு, வலுவில் ஒரு மாங்கனி மடியில் வந்து 
விழுந்த கதைபோல, பிஜேபிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனால்தான்இங்கேதமிழகத்தில்மட்டும்வருமான வரித்துறை,  சிபிஐமற்றும் புலனாய்வுப்பிரிவு இத்யாதி..இத்யாதி..என்று சோதனை என்ற பெயரில் அனைத்து அமைச்சர்கள், அவருக்குத் துணைபோன அத்தனை IAS அதிகாரிகளையும் மடக்கி அவர்கள் லஞ்ச லாவண்யத்தின் வாயிலாக ஈட்டிய பணம் சொத்துக்கள் அத்தனையையும் மீட்டு அவர்களை  சிறைக்குத்தள்ளிடும் நடவடிக்கையில் முழுமூச்சாக மத்தியில் ஆளும் பிஜேபி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும்போது அம்மிக்குழவி எம்மாத்திரம் என்பதுபோல, ஆனானப்பட்ட தலைமைச் செயலாளரே இங்கே கைது செய்யப்படும் சூழலில் மன்னார்குடி மார்பியா கும்பலின் தலைவி சசிகலா எம்மாத்திரம் ?.

அடுத்தகட்ட நடவடிக்கை அவர்கள் மீதுதான். அவர்கள் ஜெயலலிதா கள்ளத்தனமாக, லஞ்ச, லாவண்யம் செய்து ஈட்டி வைத்திருந்த 
அத்தனை அசையும் சொத்துக்களையும் ஒருமாத காலத்துக்கு முன்பே தஞ்சை காவேரி டெல்டாப் பகுதிகளுக்கு கடத்திச்சென்று மண்ணிலே புதைத்து வைத்திருந்தாலும் அவை எங்கே, எந்தெந்த இடத்தில் உள்ளது ? அவை அத்தனையும் மத்திய அரசின் உளவுப்பிரிவின் கைகளில்தான் உள்ளது அத்தனை 
விபரங்களும். இனி வரும் நாட்களில் அவை அத்தனையும் வெளிவந்து, அந்த சொத்துக்கள் முழுவதும் கைப்பற்றப்படும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கும்பல் சிறைச்சாலைக்கு செல்வார்கள். தலைவன் இல்லாத கப்பல் போல அந்தக்கட்சி 
கடலில் மூழ்கி காணமல் போகப்போவதை எந்த சக்தியாலும் தடுத்த நிறுத்திட முடியவே முடியாது. 

இதுதான் இனிமேல் இங்கே அரங்கேறப்போகும் நாடகத்தின் கடைசி கட்ட காட்சிகள் என்பதை 
தமிழக அரசியலை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக 
கண்காணித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இங்கேபதிவு செய்கிறேன் அன்பர்களே. இந்த நிலையை இங்கே 
ஏற்படுத்தும் வரையில் மத்தியில் உள்ள பிஜேபி அரசாங்கம் தூக்கமின்றி செயல்படும் என்பதே உண்மை.

எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்.
துரோகத்தை விதைத்து வளர்ந்த கட்சி அஇஅதிமுக.
இப்போது துரோகத்தால் அது அழியப்போகிறது.


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.
 

சனி, 17 டிசம்பர், 2016

அங்கே அடித்தால் ? இங்கே வலிக்கும் !! அரசியலில் இதுதான் யதார்த்தம் !!




அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள்.

வர்தா புயலின் கொடுமையால் கடந்த 
6 நாட்களுக்கும் மேலாக எனது வலைதள 
பணிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு,
அதனால் எனது பதிவுகளும் உங்களது 
கரங்களில் கிடைக்காமல் போனதற்கு,
எனது ஆழ்ந்த மன வருத்தத்தை இங்கே 
நான் முதலில்பதிவு செய்கிறேன்.

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி 
நடப்பவை நல்லவைகளாக அமையட்டும்.

அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!

ஒன்னுமே புரியலையே !!  என்று நீங்கள் 
குழம்புவது எனக்குத் தெரிகிறது. அந்தக் 
குழப்பத்திலிருந்து உங்களை மீட்டெடுப்பதும் 
எனது முதல் கடமைதான்.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 
நேற்றுடன் எந்தவித அலுவல்களையும் 
சரிவர கவனிக்காமல் முடிவுக்கு வந்துள்ளது.
( ஒருசில மசோதாக்கள் மட்டுமே அங்கே 
நிறைவேற்றப்பட்டுள்ளது)  காரணம் ..ரூபாய் 
நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் 
முடிவுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து அதைப்பற்றிய விவாதங்களில் பிரதமர் திரு.நரேந்திரமோடி நேரில்வந்து விளக்கம் அளிப்பதற்கு முன்பாக,பிரதமர் பாராளுமன்றத்திற்கு வெளியே முக்கிய 
எதிர்கட்சிகளே கருப்புப்பணத்திற்கு முக்கிய காரணம் என்று  பேசியதற்கு, அவையில் வந்து முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை கடைசிநாள் வரை புறக்கணித்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். 

இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நேற்றையதினம் குடியரசுத்தலைவர் 
திரு. பிரணாப்முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்திட இருந்த நிலையில், அரசியல் கத்துக்குட்டி, காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் குழிதோண்டி புதைத்திட தன்னால் இயன்ற அளவில் அனைத்து முயற்சிகளையும் 
சிரமேற்கொண்டு பணியாற்றிவரும் அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனியாக அவரது ரத,கஜ,துரக பதாதிகளோடு (குலாம்நபி 
ஆசாத்,மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிர்வாகிகள் சகிதத்துடன்) எந்த எதிர்கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல் 
தனந்தனியனாக, பிரதமர் மோடியை சந்தித்து, சமீபத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன் 
முழுவதையும் ரத்து செய்திட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளுடன் சந்தித்தது, காங்கிரஸ் தவிர உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனால், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கிக்கூறிவிட்டு வெளியே வந்தனர்.  

திமுக தங்களை விட்டு எங்கேவிலகிப்போனால், இங்கே தமிழகத்தில், தங்களது காங்கிரஸ் கட்சி அரசியல் அனாதைஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, (எப்போது இந்த 
கத்துக்குட்டி சென்னை வந்தாலும் தலைவரைப் பார்ப்பதே இல்லை என்பதை ஒரு கொள்கை முடிவாக செயல்படுத்தி வந்தவர்தான் இந்த ராகுல்காந்தி என்பது உலகறிந்த விஷயம்.
மறைந்த ஜெயலலிதா, உடல்நலமின்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஓடோடி வந்தவர், ஜெயா மரணமடைந்தபோது அஞ்சலி செலுத்தவந்தவர்,  அப்போது காவேரி மருத்துவமனையில் தலைவர் கலைஞர் இருந்தார்)அப்போதெல்லாம் தலைவர் கலைஞரை பார்க்க வராதவர் இன்று சிறப்பு வானூர்தியில் சென்னை வந்து காவேரி 
மருத்துவமனைக்கு நேரில் விஜயம் செய்து தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்தும், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்தும் 
சென்றிருக்கிறார் என்றால், என்ன அர்த்தம் ?

நான் மேலே குறிப்பிட்டுள்ளதுதான் காரணம். எங்கே தமிழகத்தில், தாங்கள் ( காங்கிரஸ்கட்சி) அரசியல் அனாதைகள் ஆகிவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக, வேறு வழியேதுமின்றி இந்த அரசியல் கத்துக்குட்டி, திரு. ராகுல்காந்திசென்னைவந்து சென்றுள்ளார். 

அதைக் குறிப்பிட்டுக்காட்டிடவே நான் இந்தக் 
கட்டுரைக்கு தலைப்பாக தந்தது :-

அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.

மதுரை. TR.பாலு.






திங்கள், 5 டிசம்பர், 2016

புயலுக்குப் பிறகு அமைதி !! அநியாய வெற்றிக்குப் பிறகு ?


புயலுக்குப் பிறகு அமைதி !! 

அநியாய வெற்றிக்குப் பிறகு ?


( கடந்த மாதம் 22-11-2016 அன்று நான் பதிவு 
செய்த எனது மற்றுமொரு வலைதளமான 
" நெஞ்சு பொறுக்குதில்லையே " அதில் 
எழுதியிருந்த கட்டுரையை மீண்டும் இங்கே 
பதிவு செய்கிறேன்)


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில், 
நாம் பொதுவாக பார்த்தோமேயானால்,இங்கே  
நடைபெறுகின்ற நிகழ்வுகள் ஒவ்வொன்றும்  
ஒன்றுக்குமற்றொன்றுஎதிர்மறைவிளைவுகளைசந்திப்பதாக மட்டுமே இதுவரை இயற்கையாக, அழகாக, அமைந்திருக்கிறது.

எப்படி என்று கேட்டால், கடும் கும்மிருட்டு 
நிறைந்த இரவு அதனை அடுத்து நல்ல வெளிச்சம் தருகின்ற உதயசூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் பிரகாசிக்கத் தொடங்குவதால் அந்த கும்மிருட்டு எங்கே என்று தேடினாலும் அது காணாமல் போய்விடுகிறது.

அதேபோலத்தான் காலங்களையும் இறைவன் 
கணக்காகஅளந்துஇங்கேபடைத்துள்ளான்.
எப்படி என்றால், மழைக்காலம், அதனை அடுத்து 
நம்மை வாட்டி வதைக்கும் குளிர்காலம்,அதனை 
அடுத்து இந்தக்குளிருக்கு கடும் எதிரியான வெப்பக் காலம் அதனை அடுத்து இதமான தென்றல் வீசிடும் வசந்தகாலம்...இதுபோலவே ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மறையான காலங்களாகவே இறைவன் இந்த பூமியில் நிகழ்வுகளாக படைத்துள்ளான். இது 
எதற்காக ? என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்த்தால்,நமக்கு வரும் விடை, இதுதான் :-

எதுவும் இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் இல்லை.
காலம் மாறுதலுக்கு உரியது. அதேபோல 
மனிதன் நிலையம் மாறுதலுக்கு உட்பட்டது.
நேற்று வரையில் பணக்காரன், ஆனால் இன்றோ பரம ஏழை. ( இதை பல நிகழ்வுகளில் பூகம்பம்நடைபெற்ற இடங்களில் காணலாம்) அதே போல நேற்று வரை ஏழை, பிச்சைக்காரன், ஆனால் இன்றோ திடீர் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவனே பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடுகிறான். ( இதையும் பல லாட்டரி குலுக்கல்கள் இந்த பூமியில் நமக்கு 
நடந்தவைகள் நினைவு படுத்தியுள்ளது) இதே போல சரித்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வினை உங்களிடம் சொல்லி இந்தக்கட்டுரையை நிறைவு செய்திட நான் நினைக்கின்றேன். (இன்ஷா அல்லாஹ்- இறைவன் நாடினால்)


அது ஒரு மொழியின் பெயரால் அமைந்த மாநிலம். அந்த மாநிலம்அமைந்த நாடு, சுதந்திரம் அடைந்த நாள் முதலாக, சுமார் 20 ஆண்டுகள் வரையில் தேசிய கட்சியால் ஆளப்பட்டு வந்தது. அதன் பிறகு ஏற்பட்ட 
மக்கள் விழிப்புணர்வால், மாநிலக்கட்சியின் ஆட்சி அங்கே மலர்ந்தது. அது ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள ஒரு இயக்கம். ஒரு பேரறிஞரின் தலைமையில் இரண்டு ஆண்டுகள் நிர்வாகம் மிகவும் செவ்வனே நடந்தது. திடீரென அவர் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் கிஞ்சித்தும் அடி பிறளாது நடக்கும் ஒருநல்ல நிர்வாகத்திறன் பெற்ற ஒருவர், நல்ல பல கலைகள் கற்றறிந்த கலைஞர், மிகச்சிறந்த நிர்வாகி, எதையும் 
ஆராய்ந்து, அறிந்து செயல்படுத்துவதில் சாணக்கியர், அவரது நிர்வாகத்தில் அந்த மாநிலம் நல்ல பற்பல திட்டங்களால், மிக மிக முன்னேறியது. ஆனால் அவரது துரதிர்ஷ்டமோ அல்லது விதியின் விளையாட்டோ அவரது கட்சியில், அவரது கட்சியை வைத்து, தனது 
வாழ்வை வளப்படுத்திக்கொண்ட நடிகர் ஒருவர் 
அந்தக்கட்சியை உடைத்து, தனியாக கட்சி ஒன்று 
ஆரம்பித்து, ஏறத்தாள 13 ஆண்டுகள், அம்மாநிலத்தை ஆண்டு, முன்னேற்றத் திட்டங்கள் என்று எதையுமே செய்யாமல், மறைந்து போனார். அவருக்குப்பிறகு 
அவரது கட்சியின் கொள்கை பரப்பு பணியை ஏற்று நடத்திவந்த அவரது " ஆசைக்கும்-அன்புக்கும் " உரிய ஒரு நடிகை அந்தக் கட்சியை கைப்பற்றி ஆளுகிறேன் என்று சொல்லி, இதுவரை யாருமே செய்திடாத அளவு 
லஞ்ச,லாவண்யங்கள் மூலமாக, பல கோடி கோடிகள் சொத்து சேர்த்து அதனால் தண்டனையும் பெற்று பின் அந்த தண்டனையினின்று நீதிமன்றத்தை "கவனிக்க" 
வேண்டிய விதத்தில் " கவனித்து " விடுதலை பெற்று மீண்டும் கொள்ளை அடிக்க பதவியில் அமர்ந்தார்.

இதற்கு மத்தியில் அவரது பதவிக்காலம் முடிந்து 
மீண்டும் தேர்தல் வந்தபோது, தேர்தலை நடத்தும் கமிஷனை தனது கட்டுப்பாடிற்குள் வைத்துக்கொண்டு அதனதன் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணத்தை 
அள்ளி வீசி அநியாய,அக்கிரம வழிகளில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். 

அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும் !!

என்ற முது மொழிக்கு இணங்க, இந்த நடிகை/ஆட்சித்தலைமை பெண்ணுக்கு ஒருநாள் இரவு திடீரென்று உடல்நிலை படுமோசமாகி 
படுத்தபடுக்கை ஆனார். எதனால் இந்த நிலை என்று பார்த்தால், முறைதவறி வெற்றி அடைந்தவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாது. இப்போது அவர் உடல்நிலை என்ன ? அவரை யாரும் சென்று சந்திக்க முடியாதபடி, இந்த நடிகை 
ஒரு தோழியை தன்வசம் வைத்திருந்தார். இப்போது இந்த தோழிதான் கிட்டத்தட்ட ஆளும் அதிகாரத்தைத் தனது கைவசம் வைத்துள்ளதாக கேள்வி. 

இந்த நிலையில் அங்கே நான்கு இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்தது.அதிலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றது அந்த நடிகையின் கட்சி. ஏற்கனவே செய்த முறைகேடு வெற்றிக்கு கிடைத்த பரிசு, இப்போது உடல்நிலை 
பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை. 

அப்படி என்றால், இப்போது பெற்றுள்ள அதே முறைகேடு வெற்றிக்கு என்ன பரிசு ? 

என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு 
ஆண்டவன்தான் பரிசு அளிப்பான் அதுவும் வெகு 
விரைவில் !! அது யாருமே எதிர்பாராத வகையில் சோகம் மிக நிறைந்ததாகவே இருக்கும் என்று அந்த மாநில ஜோதிட வல்லுனர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள் என்பது நடைபெற்ற வரலாறு.

புயலுக்குப் பிறகு அமைதி !!
அநியாய வெற்றிக்குப் பிறகு ?
இறைவன் பதில் தருவான் -- விரைவில் !!


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


ஆடிய ஆட்டம் என்ன ? தேடிய செல்வம் என்ன ? திரண்டதோர் சுற்றம் என்ன ?




ஆடிய ஆட்டம் என்ன ?
தேடிய செல்வம் என்ன ?
திரண்டதோர் சுற்றம் என்ன ?


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஒருவார காலமாக, என்னால் இங்கே 
எனது வழக்கமான எழுத்துப்பணியில் என்னை 
ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் போனதற்கு 
பல்வேறு சூழல்கள்,காரணங்கள், அவைகளுக்காக,நேயர்களாகிய உங்கள் அனைவரிடமும் நான் எனது வருத்தத்தை இங்கே பதிவு செய்திடக் கடமைப்பட்டு உள்ளேன்.

ஒரு வழியாக, எனக்குள்ளே ஒரு தீராத பிரச்சினை.நேற்று இரவு அது ஒரு முடிவுக்கு வந்தது. நெஞ்சில் இருந்த பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது என்றே நான் நினைக்கிறேன். எனக்கு மிகவும் வேண்டிய 
ஒருவர் கடந்தசுமார்இரண்டரைமாதங்களுக்கும் 
மேலாக, கோவை மருத்துவமனையில் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயின் கொடிய கரங்களில் சிக்கி, சின்னா பின்னமாகி சீரழிந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார். எனக்கு அந்த மறைவு மனதளவில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி 
விட்டது. நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அவர் கோவையில் எண்ணிலடங்கா கோடிகள் அளவுக்கு திரவியங்கள் சேர்த்து வைத்து இன்று 

"போய் விட்டார் புண்ணியலோகத்துக்கு" 

என்ற மனோகரா திரைப்படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனத்தின்படி காலமாகிவிட்டார். 

தமிழ் மூதாட்டி என்று அழைக்கப்பட்ட அவ்வையார் எழுதிய பாடல்தான் இன்றைய தினம் எனது நினைவின்பால் வருகின்றது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த 
கேடுகெட்ட மானிடர்காள் !! கேளுங்கள் !!
கூடு விட்டாங்காவிதான் போனபின்-யாரோ 
அனுபவிப்பார் பாவிகாள் அப்பணத்தை !!

இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.
காலம் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒருவரின் 
இறப்பின் மூலமாக, பல்வேறு அனுபவங்களை 
கற்றுத்தருகிறது என்ற மூதறிஞரின் வரிகளுக்கு 
இணங்க,அந்தஅம்மையாரதுமறைவுஎனக்குள்  மாற்றமுடியாத,மறைக்கஇயலாதசெய்தியை 
விட்டுச் சென்றிருக்கிறது எனது அன்புத்தமிழ் 
நெஞ்சங்களே.

உலகையே கட்டி ஆண்டமாவீரன்நெப்போலியன் 
தனது மறைவுக்குப் பிறகு தனது சமாதியில் தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியுமாறு வைத்திட வேண்டும் என்று உயில் எழுதி வைத்து மறைந்தான் இது வரலாறு. 

எதற்காக என்று கேட்டால், தான் உலகையே 
கட்டி ஆண்டு சொத்துக்களும் சுகங்களும் கடல் வற்றினாலும் தன்னிடம் உள்ள திரவியங்கள் வற்றாத அளவுக்கு செல்வங்கள் சேர்த்து வைத்திருந்தாலும், தான் இந்த உலகைவிட்டு 
மறைந்துவிடும் பொழுது எதையுமே எனது கைகளில் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்திடும் விதமாக மாவீரன் நெப்போலியன் எழுதிவைத்துச் சென்றான்.

அந்த ஒரு நிகழ்வுதான் இப்போது எனது உள்ளத்தில் உணர்ச்சியில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

நன்றி !! வணக்கம் !!


திங்கள், 28 நவம்பர், 2016

ஒரு ஊரில ஒரு விலைமாது !!



ஒரு ஊரில ஒரு விலைமாது !!


அது ஒரு அழகான பட்டினம். அதில் பலர், 
பல ஊர்களில் இருந்து வந்து செல்வார்கள்.
மக்கள் கூட்டம் அதிகமென்றாலே இந்தக் 
கதையில் வரும் விலைமாது போன்ற 
நபர்களுக்கு பஞ்சமா என்ன ?. அதிலும் 
நமது கதையில் வருகின்றவள் நல்ல நடை, 
உடை,உயரம், உயரத்துக்கேற்ற யவனம்,
இத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றவள் 
அந்த ஊரில் அவள் ஒருத்தி மட்டுமே. மிகவும் சிறப்பாக அழகு தமிழில் வீராவேசமாக வெண்ணை வெட்டி சிப்பாய் போல அடுக்கு மொழியில், அழகு தமிழில் பேசி, அத்தனை பேரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து விடக்கூடிய ஒரு ஆற்றலைப் பெற்றவள் அந்த  
அழகு தேவதை, அவளுடைய தலையெழுத்து 
ஆண்டவன் அவளை ஒரு விலைமாதாகப் 
படைத்துவிட்டான். அவள் பெயர் வை.கோபால 
நாயகி. அவளுக்கு சொந்த ஊர் விருதுநகர் 
மாவட்டம் சாத்தூரை அடுத்த கலிங்கப்பட்டி 
என்ற சிற்றூருக்கு அடுத்து உள்ள ஒரு கிராமம்.
யார் அந்த ஊரில் பெரிய பணக்காரரோ, அல்லது 
யாரிடம் செல்வாக்கு அதிகம் உள்ளதோ, இவள் 
அந்த நபரிடம் வலியச்சென்று சிரித்துப்பேசி 
மயக்கி,  தலைவர் கலைஞர் அவர்கள் தந்து மனோகரா படத்திற்கு எழுதிய வசனத்தின் படி :- 

மயக்குகின்ற ஒரு பார்வை !!                                   இந்த  மண்டலமே என் காலடியில் !!                   நான் சிரித்தால் போதும் !! இந்த ராஜ                 சிம்மாசனமே என் மடியில் !! 

என அவர்களது கனிவான பார்வையைத்  
தன்வசமாக ஆக்கி, அதன் மூலம் ஏகப்பட்ட 
திரவியத்தைத்தேடி அந்த ஊரிலேயே அந்த 
வட்டாரத்திலேயே, பெரிய கோடீஸ்வரியாக 
மாறிவிட்டாள். அப்போது அந்த ஊரில் ஆட்சி 
புரிந்த தலைவன் பெயர் J.ஜெயந்தன். அவனை 
இந்தக் கோமளவல்லி தனது கைக்குள் போட்டு 
ஏகப்பட்ட பணத்தைச் சுருட்டிக்கொண்டாள்.
இந்த நிலையில் அந்த ஊரில் பொதுத்தேர்தல்
வந்தது. அப்போது அந்த தலைவன் J.ஜெயந்தன்,
இந்த விலைமாது வை.கோபால நாயகியை 
அழைத்து அவன் வசம் 1,6௦௦ கோடிபொற்காசுகள் 
தந்து, நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ 
எனக்குத் தெரியாது. ஆனால் வருகின்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றாக சேரவிடக்கூடாது.அதிலும் குறிப்பாக அந்த கருப்பன் ஜயகாந்தனை நமக்கு முந்தி ஆட்சிபுரிந்த அந்த இயக்கத்துடன் 
கூட்டு சேர விடாமல், அந்த கருப்பன் ஜயகாந்தனுக்கு,அவனுடைய மனைவி சேமலதாவுக்கு எவ்வளவு பணம் கேட்கிறார்களோ அதைக் கொடுப்பதுடன் 
அடுத்து அந்தக் கருப்பனையே முதல்வர் என்று 
ஆசை வார்த்தை சொல்லி, கெடுக்க வேண்டியது 
மட்டுமே உனது செய்கையாக இருக்க வேண்டும் 
என்று போதனை சொல்ல, இந்த விலைமாதுவும்
தலைவன் J.ஜெயந்தன் சொன்னது போல எதிர்கட்சிகளை ஒன்றாக இணையவிடாமல், மக்கள் நலன் கொ(கெ)டுக்கும் அணி என்ற பெயரில் அணி ஒன்றை அமைத்தது முதல் அதில் சேர்ந்த அத்தனைகட்சிகளையும் களைஎடுத்து கெடுத்து சின்னாபின்னமாக ஆக்கி, தேர்தலில் 
படுதோல்வி அடையச் செய்ததோடு, அங்கீகாரம் 
ரத்து செய்வதுவரை மிகச் சிறப்பாக தனது காரியத்தை,கச்சிதமாக செய்து முடித்தாள் இந்த சாத்தூர் கலிங்கப்பட்டி அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த விலைமாது வை.கோபால நாயகி. 

இவள் யாருக்காக, எந்தத்தலைவனுக்காக 
பாடுபட்டாளோ, அவன் அந்த J.ஜெயந்தன் அப்போது நடைபெற்ற தேர்தலில்அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப்பிடித்தான். அரியாசனையில் அமர்ந்தான்.இதற்கு மத்தியில்,இவ்வளவு அயோக்கியத்தனம், அக்கிரமம், அநியாயம் செய்து வெற்றி பெற்ற தலைவன் ஜெயந்தனால் நான்கு மாதங்கள் கூட ஆட்சியைத் தொடர முடிய வில்லை.ஒரு நாள் இரவு திடீரென்று மூச்சுத்திணறல் மற்றும் 
சுவாசக்கோளாறு, நுரையீரல் தோற்று நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கெட்டகொழுப்புபோன்றபலவேறு வியாதிகளால் மிகமிகக் கடுமையாகவே பாதிக்கப் பட்டு, படுத்த படுகையாகப் போய்விட்டான். அதைப்பற்றி
நமது விலைமாதுக்கு என்ன கவலை ? 

இவன் போனா நமக்கு இன்னொருத்தன் !!இதுதானே வேசிகளின் உயிர்மூச்சு வாடிக்கை, மற்றும் வசனம். அதற்கு தகுந்தால் போல 
அந்த முழு தேசத்தின் அதிபதி திரு.கிரேந்திர பேடி என்பவரை இப்போது வலைவிரித்து, அவருக்கு சாதகமாகப் பேச ஆரம்பித்துவிட்டாள் இந்த விலைமாது இப்போது. இவளை நம்பி தேர்தலில் இவள் சொன்னபடி கேட்டு நடந்த மற்ற அத்தனை கட்சிகளும் அதனதன் 
தலைவர்களும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு கன்னத்தில் கைவைத்து இந்த செருக்கிய நம்பி நாம தெருவுக்கு வந்துட்டோம். ஆனா இவ என்னடான்னா, இப்ப பெரிய புளியங்கொம்பை இல்ல புடிச்சுகிட்டா ? என்று புலம்புகிறார்களாம். இப்போது புலம்பி என்ன செய்ய. அப்ப புத்திய கடன்கொடுத்து தனியா அமைப்பு ஆரம்பிச்சு போண்டியாகப்போயிட்டு
இப்ப அழுது லாபமென்னஅவள்ஆட்சிஅல்லவோ நடக்குது இங்கே !!

நீங்களே பதில் சொல்லுங்க பார்ப்போம். இந்தக் கட்டுரை மூலமாக, நீங்கள் யாரை, எந்த உண்மையான நபரை இந்தக் கட்டுரை குறித்துக் காட்டி, தோலுரித்து உவகை பெறுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டா சரி. வை.கோபால நாயகியே, நீ எங்கிருந்தாலும் வீழ்க !! 


புரிஞ்சாபுரிஞ்சுக்கோ !! புரியலன்னா அடுத்த ஆளைக்கேட்டு தெரிஞ்சுக்கோ !!என்று சொல்லி நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். 

நன்றி. வணக்கம்.


அன்புடன். மதுரை. TR.பாலு.

செவ்வாய், 22 நவம்பர், 2016

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை !!



வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1962ம் ஆண்டு. AVM புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பானுமதி நடிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளைப்படம் 

                             " அன்னை "

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் அமைக்க, 
இசையமைப்பு R.சுதர்சனம். அந்தப்படத்தில் என்னைக்கவர்ந்தபலபாடல்கள்இடம்பெற்றிருந்தாலும்,மறைந்த குணச்சித்திர/நகைச்சுவை நடிகர்J.B.சந்திரபாபு,ஆடிப்பாடிநடித்தஇந்தபாடல் மிகவும் என்னால் இரசிக்கப்பட்டதுமேலும்எனது 
மனதைத்தொட்டது என்று சொன்னால் அது 
மிகையில்லை. இந்தப்பாடலின் வீடியோ பதிவை கீழே குறித்துள்ள வலைதள விபரத்தை தனியாக குறித்து க்ளிக் செய்தால் நீங்களும் பாடலைக் கேட்டு மகிழலாம்.

https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM


பாடல் வரிகள் :-

புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை !!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை !!

                                                                             ( புத்தியுள்ள )

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை !!
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை !!
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம்                                                                                             சொந்தம் !!
பணமில்லாத மனிதனுக்கு சொந்தமென்றும்                                                                                                 துன்பம் !!

                                                                              ( புத்தியுள்ள ) 

பருவம்வந்தஅனைவருமேகாதல் கொள்வதில்லை !!
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை !!
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை !!
சேர்ந்துவாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை !!

                                                                               ( புத்தியுள்ள )

கனவுகாணும் மனிதனுக்கு காண்பதெல்லாம் கனவு !!
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு !!
அவன் கனவில் அவள் வருவாள் !! அவனைப்பார்த்து சிரிப்பாள் !!
அவள் கனவில் யார் வருவார் ? யாரைப்பார்த்து அழைப்பாள் ?

                                                                            ( புத்தியுள்ள )

************************************************************************************************************


சரிங்க மிஸ்டர் TR பாலு, இப்ப நீங்க எதுக்கு இந்தப்பாட்டை நினைவு படுத்தி எழுதுனீங்க ? அப்டீன்னுதானே நீங்க என்னையப்பார்த்து கேள்வி கேக்குறீங்க ? சொல்றேன் 
தெளிவா பதில் சொல்றேன்.

கடந்த 19ம் தேதி நடைபெற்ற தமிழ்நாட்டில் மூன்றும் புதுச்சேரியில் ஒன்றும் ஆக மொத்தம் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே அமோக வெற்றி பெற்றுள்ளது. இது ஒன்றும் புதுமையானதும் அல்ல.இந்த வெற்றி போற்றுதலுக்கு உரியதும் அல்ல. ஆட்சி,
அதிகாரம் உள்ள ஆளும்கட்சிதான் வெல்லும் இது உலகறிந்த உண்மை. 

" இடை" யில் நடக்கும்தேர்தலில் ஆள்பவன்தான் (கணவன்)வெற்றிபெற்றுத்தீரவேண்டும்.இல்லை என்றால் அவனது ஆளுகைத்தன்மையில் ஏதோ 
கோளாறு என்றுதான் இந்த உலகம் எண்ணும். 

அதுதான் இப்போது இங்கே நடைபெற்றுள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக்கழகத்தைப் பொறுத்தவரையில் அதன் நிறுவனர் பேரறிஞர் அண்ணா, என்ன சொன்னார் ?:-

தம்பி !! தோல்வியைக்கண்டுதுவண்டு விடாதே !!
அதுதான் அடுத்து வர இருக்கின்ற வெற்றியின் முதல்படி !!

என்று. அந்தகருத்தை நமது சிந்தையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து உழைப்போம் மீண்டும் வெற்றி பெறுவோம் ஆட்சியைப் பிடித்து, மக்கள் பணி செய்திடுவோம்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

திங்கள், 14 நவம்பர், 2016

இன்று ரொக்கம் !! நாளை கடன் !!...அந்தக்கால பெட்டிக்கடை வாசகம் !!





இன்று ரொக்கம் !!  நாளை கடன் !!

அந்தக்கால பெட்டிக்கடை வாசகம் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள்.

என்ன ஆச்சு ? நம்ம மதுரை T.R. பாலுவுக்கு.
மறை கழண்டு போச்சா ? இப்டி சம்பந்தா 
சம்பந்தம் இல்லாம ஒரு தலைப்புல இப்டி 
ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டாரே என்று 
நீங்கள் அனைவரும் உங்களது புருவங்களை 
சற்றே உயர்த்திப்பிடித்துப் பார்ப்பதை என்னால் 
இங்கிருந்தே அனுமானித்திட முடிகிறது என் 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நான் சிறு பையனாக வாழ்ந்திருந்தபொழுது
பெட்டிக்கடைகளில் தலைப்பினில் குறிப்பிட்டு 
இருந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் 
வந்துபோகும் வாடிக்கையாளர்கள் படிக்கும் 
வகையில் தொங்கிக்கொண்டு இருக்கும்.
அதை எப்போது படித்தாலும், இன்னைக்கு 
ரொக்கம். நாளைக்கு கடன் என்றே நமக்கு 
நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.

அது சரிங்க..அத ஏன் இப்போ எழுதுறீங்க ?

உங்களோட கேள்வி நியாயமானதுதான்.
அத நான் இப்போ ஏன் எழுதுறேன்னு கேட்டா 
எல்லாம் நமது மத்திய தரைவழிப்போக்குவரத்து
இணைஅமைச்சர் பொறுப்பைவகித்துக்கொண்டு 
இங்கே வலம்வந்து கொண்டிருக்கும் நமது 
அருமைக்கும் பெருமைக்கும் உரிய அண்ணாச்சி 
திரு. பொன்னார்ஜி அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த வருஷம் நாம ஜல்லிக்கட்டு நடத்திரலாம்..நடத்திரலாம்..என்று சொல்வதும் அது நடத்த முடியாம போறதும் திரும்ப அடுத்த ஆண்டு வரும்போது கண்டிப்பா இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உண்டு என்று சொல்வதும், என்னவோ சின்னப்புள்ளைக்கு மிட்டாய் 
வாங்கித்தரேன் என்று ஏமாத்துறதுபோலவே இருக்கு. 

வரும் 16ம் தேதி நடைபெற உள்ள குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வினில் நிறைவேற்றிடக் காத்திருக்கும் பட்டியலில் ஜல்லிக்கட்டு மசோதா இடம்பெறவில்லை 
என்பதை பார்க்கும்போது, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அவர்அறிவிப்பு 

" கோவிந்தா !! கோவிந்தாதான் " 

என்பது பட்டவர்த்தமாக தெரியவந்துவிட்டது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

இப்ப சொல்லுங்க நீங்க நியாயத்தை !! 

நான் கட்டுரைக்கு கொடுத்த தலைப்பு சரியா இல்ல தவறா என்று.

உங்களோடபதிலுக்காகஆவலோடுகாத்துக்கொண்டு இருக்கும் 

உங்கள் அன்பன் 
மதுரை T.R.பாலு.

நன்றி !! வணக்கம் !!

ஞாயிறு, 6 நவம்பர், 2016

மறைந்த மதுரை மண்ணின் மைந்தர் தீப்பொறியாருக்கு அஞ்சலி !!




        தீப்பொறியாருக்கு அஞ்சலி !!



திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னிலை பேச்சாளரும் மதுரை மண்ணில் இயக்கத்தை தனது பேச்சுத்திறமையால் வளர்த்தவருமான தீப்பொறி ஆறுமுகம் நேற்று ( 05-11-216 ) இரவு நம்மை எல்லாம் துன்பக் கடலில் மூழ்கவிட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். 

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை. T.R.பாலு.

************************************************************************************************************


கண்டங்கள் ஐந்தில் மூன்றெழுத்து கொண்ட ஒரு கண்டம்.

அதில் நான்கெழுத்து கொண்ட ஒரு தீபகற்ப நாடு.

அதன் தென்கடைக்கோடியில் உள்ள மொழியின் 
பெயரால்  ஐந்து எழுத்துக்கொண்டு அமைந்த ஒரு மாநிலம். 

அங்கே உலகப் புகழ்பெற்ற ஆலயம் மூன்றெழுத்து நகரில் உள்ளது.

அதில் வாழ்ந்திருந்த ஒரு மிகப்பெரிய பேச்சாளர் 
பற்றிய வரலாறு இது. 

சிவபெருமானின் இளைய புத்திரனின் பெயர் அவருடையது. 

அவர் வாழ்ந்திருந்த மாநிலத்தில் ஆளும் அதிகார அமைப்பில் உயர்ந்த பதவியில்இருந்த ஒரு பெண்மணி தனது பெயருக்கு 
முன்பாக செல்வி என்ற அடைமொழியை வைத்து அழைக்கப்பட்ட காலம் அது. ஆனால், அவருக்கு திருமணம் எல்லாம் முடிந்தோ அல்லது முடியாமலோ  ஒரு பெண் குழந்தை 
வேறு உண்டு என்று அந்தப்பெண் வாழ்ந்திருந்த 
மாநிலம் முழுவதும் அரசால் புரசலாக பேசப்பட்டதும் உண்டு. இதனால் விசனம் அடைந்த அந்த இயக்கத்தின் முன்னணி பேச்சாளர் சிவபெருமானின் இளைய 
புத்திரனின் பெயரைக்கொண்டவர் சார்ந்திருந்த 
இயக்கத்தின் மேடையில் பேசுகின்றபோது இந்தப்பெண் செல்வியே அல்ல இவருக்கு குழந்தை ஒன்று உள்ளது எனவே இவர் செல்வி என்று அழைத்திட சற்றும் அருகதை இல்லாதவர் இங்கே எனது பேச்சை இரகசிய குறிப்பு 
எடுத்துக்கொண்டிருக்கிற காவல்துறை அதிகார 
அமைப்பினர் என்மீது வழக்குப்பதிவு செய்தால் 
அதை நிமிர்ந்த நெஞ்சோடு சந்திக்கத்தயார் என்று மார்தட்டி சவால் விடுத்தார் அவர். மறுநாள் காவல் துறை இவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். 

நீதிபதி இவரைப்பார்த்து தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விபரம் தங்களுக்குத் தெரியுமா ? ஏன் அப்படி உயர்ந்த பதவியில் உள்ள அந்தப் பெண்மணியைப்பற்றி தாங்கள் 
இப்படி  அவதூறாக பேசினீர்கள் ? அப்படி பேசியதற்கு தங்களிடம் ஆதாரம் ஏதாவது உண்டா ? விபரமாக தங்களிடம் இருந்து பதிலை இந்த நீதி மன்றம் எதிர்பார்க்கிறது 
என்று நீதியரசர் கூறினார். 

உடனே பேச்சாளர் :- கனம்நீதியரசர் அவர்களே !!
நானும் சரி !! நான்சார்ந்திருக்கிறஇயக்கமும்சரி !!
ஆதாரம் இல்லாமல் பேசி பழக்கம் கிடையாது.
செல்வி என்று ஒரு பெண்ணை அழைத்தால் அவள் திருமணம் ஆகாதவள் என்றே பொருள். ஆனால் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட பெண்மணி செல்வி அல்ல இவர் திருமணம் ஆகியோ ஆகாமலோ ஒரு குழந்தைக்கு தாயானவள் என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன் மாட்சிமை பொருந்திய நீதியரசர் அவர்களே !! என்று சொன்னார் பேச்சாளர்.

உடனே அதற்குநீதிபதி :- அதற்கு என்ன ஆதாரம் ?தங்களிடம் அத்தாட்சி ஏதாவது உண்டா ?

பேச்சாளர் :- ஒரு பெண் குழந்தை பெற்றவள் என்பதற்கு ஆதாரம், அத்தாட்சி அந்தப் பெண்ணிடமே இயற்கை அளித்திருக்கிறதே கனம் நீதியரசர் அவர்களே.நான் வேறு தனியாக தர வேண்டுமா ?

நீதிபதி :- புரியும்படியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

பேச்சாளர் :- எந்த ஒரு பெண்ணும் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்ற பிறகு அவளது வயிற்றுப்பகுதிவிரிந்து பிறகு சுருக்கம் பெறுவதால் வரிசை வரிசையாக கோடுகள் அமைந்திருக்கும். நான் இந்த உயர்பதவியில்
உள்ள பெண்ணை இந்தக்காரணத்திற்காகத்தான் இவர் செல்வி அல்ல, திருமதி என்று அழைக்க வேண்டும் என பேச்சில் குறிப்பிட்டு இருந்தேன். என்மீது வழக்கு ஒன்றை பதிவு செய்த காவல்துறையாக இருக்கட்டும் அல்லது 
இந்த நீதிமன்றத்துக்கே நான் கூறிய இந்தக் கருத்துக்களை சரிபார்க்க, சோதிக்க, சம்பந்தப்பட்ட உயர்பதவியில் உள்ள 
அந்த பெண்ணை ஒரு பெண் மகப்பேறு மருத்துவர் அதுவும் அரசுப்பணியில் உள்ளவர் சோதித்து சான்றிதழ் தரும்போது அதில் உள்ள உண்மை இந்த நீதி மன்றத்திற்கு மட்டுமல்ல 
நீதியரசர் அவர்களே, இந்த நாட்டிற்கே தெரிய வரும். இதுதான் எனது பதிலும் தாங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் உண்டான விளக்கமும்.

நீதிபதி :- ( வழக்கைப பதிவு செய்த காவல்துறை உயரதிகாரி  அவர்களிடம் ) என்ன சொல்லுகிறீர்கள் ? இவரது கோரிக்கையை 
தாங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க உங்களுக்கு கால அவகாசம் அளித்து வழக்கை ஒருவார காலம் நான் ஒத்திவைக்கிறேன்.

அன்பர்களே, இப்போது விஷயம் உயர்பதவியில் உள்ள அந்த பெண்மணியிடம் செல்கிறது. மிகவும் கோபமடைந்த அவரோ யாரைக்கேட்டு இந்த வழக்கை பதிவு செய்தீர்கள். அந்தப் 
பேச்சாளர் கூறியபடி மருத்துவப் பரிசோதனை ஏதாவது செய்தால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல நான் இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த விஷயம் 
நாடு முழுவதும் தெரிந்து எனது மானம் சந்தி சிரிக்கவா இந்த வழக்கை பதிவு செய்தீர்கள் ? உடனடியாக அந்த வழக்கினை திரும்பப்பெற்று அத்தோடு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று காவல்துறைக்கு கடுமையான உத்திரவு 
ஒன்றினை அவர் பிறப்பித்தாராம். ஆனாலும் தன்னை இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த பேச்சாளரின் நாக்கை அறுத்துப்போடுங்கள் என்று கட்சிக்காரர்களுக்கு 
உத்திரவிட, இரண்டொரு நாள் கழித்து இந்த பேச்சாளர் அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் முடித்து இரவு வீட்டிற்கு மூன்றுசக்கர மிதிவண்டி 
ஒன்றினில் வந்து கொண்டிருந்த போது  அந்த மூன்றெழுத்து நகரைச்சேர்ந்த ஆளும் கட்சியின் செல்லமான ராஜாவின் அப்பா பெயரை தனது பெயராகக் கொண்ட நபர் தலைமையில் 
ஒரு கூட்டத்தினர் அந்த மிதிவண்டியை வழிமறித்து அவரை தாக்கி பிளேடு கத்தியால் அவரது நாக்கை அறுத்தனர் என்பது வரலாறு. 

அதற்காக பேச்சாளரின்நாக்கினை  அறுத்த அந்த நபருக்கு அந்த மாநகரத்தந்தை என்ற பதவி பிற்காலத்தில்வழங்கப்பட்டதும் ஒரு வரலாறு. 

************************************************************************************************************


புதன், 2 நவம்பர், 2016

கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது !!-( அ.இ.அ.தி.மு.க. விற்கு ஆதரவு அளித்த பி.ஜே.பி யின் செயலால் பாண்டிச்சேரியில் வெளிச்சத்துக்கு வந்தது )




கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது !!





உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற 
எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் என் இனிமை 
நிறைந்த காலை வணக்கங்கள்.

நேற்றைய தினம் புதுச்சேரியில் நடைபெற 
உள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அங்கே தனித்துபோட்டியிட தெம்பு,திராணி,வாக்கு,வகை எதுவும் இல்லாத காரணத்தால், அண்ணா திமுக விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலமாக, இதுவரை நாம் குற்றம் சுமத்தி வந்த இருவருக்கும் உள்ள அந்த " கள்ளத்தொடர்பு " இன்றைக்கு  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்னதான் பொத்திபொத்தி மூடினாலும் 
தாழம்பூ மற்றும் பலாச்சுளை இவைகளின் 
நறுமணம் வெளியே கசிந்து வந்துவிடும் என்ற 
முதுமொழிக்கு இணங்க நேற்றையதினம் அந்த 
கள்ளத்தொடர்பு கசிந்து வெளியே வந்துள்ளது
என்கின்றவிஷயத்தைநேயர்களின்கவனத்திற்கு 
கொண்டு வருகிறேன்.

தமிழகத்தில் எப்படி திரைமறைவில் ஆட்சி 
அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பேடித்தனமான மோடி அரசாங்கம் அங்கே புதுச்சேரியிலும் தனது அதிகாரத்தை செலுத்த வெக்கம் கெட்ட, மானங்கெட்ட,ரோஷம் எதுவுமே இல்லாத தமிழகத்தை ஆளும் கட்சியான அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அந்த தேர்தல் பணிக்குழுவும் அதனை ஏற்றுக்கொண்டு 
உள்ளது எப்பேர்பட்ட மோசடித்தனம் என்பதனை 
அங்கே புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு 
தொகுதி வாக்காளப்பெருமக்கள்புரிந்துகொண்டு
வாக்களிக்க வேணுமாய்க் கேட்டுக்கொண்டு 
இந்த அளவில் விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


செவ்வாய், 25 அக்டோபர், 2016

மெல்ல மெல்ல மோடி பக்கம் சாய்கிறதா ? தமிழக அரசு !!





அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழக அரசியல் சூழலில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடைபெற்று வருவது, இப்போது கண்கூடாக தெரிகிறது அன்பர்களே.                                     
எப்படி என்றுகேட்டால்,முதல்வர்உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் விரைவில் 
உடல்நலம் பெற்று வீடுதிரும்பி,அரசுப்பணிகளை கவனிக்க வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இங்கே 
அரசியல் பணிகளில், முதல்வரிடம் இருந்த அனைத்துத் துறைகளும் நிதி அமைச்சரிடம் கைமாறிய பின்பு, முதல்வர் அவர் நன்றாக உடல்நிலைஇருந்த காலங்களில் கடைப்பிடித்துவந்த பல கொள்கைகளில் இப்போது உள்ள நிதி அமைச்சர் கீழுள்ள அமைச்சர்கள் முதல்வர் இதுவரை எடுத்த தைரியமான  நிலையில் இருந்து நழுவி மோடி அவர்கள் செயல்படுத்தி வந்த திட்டங்கள் 
பக்கம் சாய்வது மிகவும் நன்றாகவே இங்குள்ள அரசியல் ஆர்வலர்களால் உணரப்படுகிறது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

எப்படி என்றால் :-

1)  முதல்வர் அவர்கள், இதுநாள்வரையிலும் மிக மிகக் கடுமையாக எதிர்த்து வந்த " உதய் " 
மின்திட்டத்தில் இப்போது உள்ள திரு பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள 
மின்துறை மந்திரி, டெல்லிக்கு வலுவிலே சென்று முந்தி விரித்த கதையாக அந்தத்திட்டம் தமிழகத்திலே இனிமேல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது அரசியல் ஆர்வலர்களின் முதல் சந்தேகம்.

2)  அடுத்தது என்னவென்றால், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு," நீட் " என்ற நுழைவுத் தேர்வை முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தில் அமல் படுத்தக்கூடாது என்பதில் மிகவும் அழுத்தமாக இருந்த நிலைமை மாறி, நேற்று அந்த கல்வித்துறை அமைச்சர் டெல்லி சென்று, அங்கேயும் வலுவிலே சென்று முந்தி விரித்த கதையாக, நீட் தேர்வு எழுத பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கட்சி விட்டு கட்சித்தாவி வந்த அமைச்சர் மா.ஃபா. 
பாண்டியராஜன்பத்திரிகைமற்றும்தொலைக்காட்சி நண்பர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறியதை எல்லாம் ஒருசேர வைத்துப்பார்கின்ற போது இங்கே நாம் என்ன முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என்று கேட்டால், 
உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு 
அனுமதிக்கப்பட்டு உள்ள முதல்வர் இப்போதைக்கு வீட்டிற்கு திரும்பிவர 
வாய்ப்பில்லை என்றதொரு முடிவுக்கு வந்த மத்திய அரசாங்கம், இங்கே மக்கள் பணி ஆற்ற வேண்டிய அனைத்து அமைச்சர் பெருமக்களும் அவரவர் சொந்த நலனில் மட்டும் அக்கறை செலுத்தி, ஒவ்வொருவரும் பல்லாயிரம் 
கோடிகள் பணம்சேர்த்து,குவித்துவைத்துள்ளதை ஆவணங்கள் ரீதியாக வருமானவரித்துறை மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு ஆகியவைகள் மூலம் இந்த அமைச்சர்களின் பிடிகள் மத்தியில் உள்ள ஆளும் பி.ஜே.பி. அரசாங்கத்தின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ள காரணத்தால், அதனை பகடைக்காயாக பயன்படுத்தி, அதன் மூலம் இங்கே உள்ள அமைச்சர் பெருமக்களை பயமுறுத்தி, மத்திய அரசாங்கத்திற்கு சாதகமாக, மைய அரசாங்கம் அமல் படுத்திட நினைக்கும்உத்திரவுகள் அனைத்தையும் இங்கே 
தமிழ்நாட்டில் செயல் படுத்திட வேண்டும் அவ்வாறு செய்திட மறுத்தால், இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதோடு, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஈட்டிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் 
ரொக்கப்பணம் இவைகள் மத்தியில் ஆளும் அரசால் கைப்பற்றப் பட்டு, இவர்கள் மீது, துறை ரீதியாக கிரிமினல்வழக்குகள் தொடுக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் காராக்கிரகத்தில் (ஜெயிலில்) தள்ளப்படுவார்கள் என்று மிரட்டி, 
அந்த மிரட்டலுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும், பறிமுதல்களுக்கும் பயந்து போய் மட்டுமே அமைச்சர்கள், மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் சொல்லுகின்ற அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துகின்றனவோஎன்று பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான்என்றே அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். ஆக, முதல்வர் இதுவரை காத்து வந்த மத்திய அரசின் காட்டு தர்பார் திட்டங்களை இங்கே இனிமேல்செயல்படுத்த மாட்டோம்  
என்று எவ்வளவுக்கு எவ்வளவு அம்மையார் உறுதியுடன் எதிர்த்து வந்தாரோ அவை அத்தனையையும் இங்குள்ள அமைச்சர்கள் தங்களது சொந்த நலனுக்காக, அம்மையார் பிறப்பித்தஅத்தனைஉத்தரவுகளையும்காற்றினில்பறக்க விட்டுவிட்டு மைய அரசுக்குலாலிபாடத்துணிந்துசெயல்படுகிறார்களே என்று ஆளும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் எண்ணுவதில், பொருள் 
இல்லாமல் இல்லை என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு. 

வெள்ளி, 7 அக்டோபர், 2016

" மரணம் " இதைத் தவிர்க்கவே முடியாதா ? மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா பாடிய பாடல்!!





மனிதனால் தவிர்க்க முடியாதது                              

                     " மரணம் " 

                      




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த 
மாலை வணக்கங்கள்.

மறைந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய 
பாடல், " பாவமன்னிப்பு " திரைப்படத்தில் 
இடம்பெற்றது.

பறவையைக் கண்டான் !!
விமானம் படைத்தான் !!
பாயும் மீன்களில் !!
படகினைக் கண்டான் !!
எதிரொலி கேட்டான் !!
வானொலி படைத்தான் !!

என்ற வரிகளில் மனித இனத்தின் அதியற்புத 
படைப்பாற்றலை புகழ்ந்திருந்தார் கவியரசர்.
இவ்வளவு திறமை கொண்ட மனித இனத்தால் 
மரணத்தை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது 
தள்ளிப்போடவோ முடிந்ததா ? என்றால் இன்று 
மருத்துவ விஞ்ஞானம் வெகு வேகமாக பெருகி 
வளர்ந்துள்ள சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள 
விஷயம் என்பது ஓரளவு சாத்தியமாகத்தான் 
உள்ளதே தவிர, முற்றிலும் மரணத்தைத் தள்ளிப் 
போட யாருக்கும் அதிகாரம் இல்லை, ஏனென்றால்  அது நம்மைப்படைத்த பரம்பொருளின் கைகளில் வைத்துக் 
கொண்டிருக்கும் ஒரு " வீட்டோ " சக்திதான் 
என்பது முற்றிலும் உண்மை. உண்மையைத் 
தவிர வேறு ஒன்றும் இல்லை.

கிறிஸ்த்துவ மதம் என்ன சொல்லுகிறது என்றால் :-

பாவத்தின் சம்பளம் " மரணம் " என்று.

நம் கழகத் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான் வசனம் எழுதிய "மனோகரா "திரைப்படத்தில் என்ன சொல்லியுள்ளார் எனில்:-

கடலிடை துரும்பம்மா !!
மனித வாழ்வு !!

என்று. 

மறைந்த கவியரசர், நடிகர் திலகம் மறைந்த 
சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "தெனாலிராமன்"திரைக்காவியத்தில் :-

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள் !!
சொல்லாமல் போவார் அல்லாவிடம் !! -அவர் 
முன்னாளில் சேர்த்த செல்வங்களாலே !!
பின்னோர்கள் சந்தோசம் கொண்டாடுவார் !!

என்று எழுதியிருந்தார். 

மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா மரணத்திப் பற்றி, அதன் உண்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக விளக்கிக்கூறும் விதமாக ஒரு பாடல்ஒன்று பாடியிருப்பார்.                         

அதுஎன்ன என்றால் :-

மவுத்தையே (மரணம்) நீ மறந்து வாழலாகுமா ?
மாறிடும் பூமியில் நீந்துதல் நியாயமா ?

மன்னாதி மன்னர் எல்லாம் நிரந்தரமாய் 
இருந்ததில்லை !!
மகத்தான முறையில் வாழ்ந்த !!
மனிதரெல்லாம் நிலைத்ததில்லை !!பொன்னான செல்வந்தரும் !!
பூவுலகில் நிலைத்ததில்லை !!
பூவுலகின் இன்நிலையை புரிந்திடாமல் !!
பிதற்றுகிறாய் !!

                                                                      ( மவுத்தையே )

நிச்சயம் மரணம் வரும் !!
நீ ஒரு நாள் இறந்திடுவாய் !!
நேசரெல்லாம் அழுதபின்னே !!
நீ செந்தூக்கில் ஏறிடுவாய் !!
அச்சான கபர்ஸ்தானில் ( புதைகுழி) !!
நீ அடங்கி மண்ணாவாய் !!
அந்நாளை எண்ணிடாமல் நீயும் !!
ஏனோ பிதற்றுகிறாய் !!

                                                                         ( மவுத்தையே)

என்று அன்னார் பாடிய அந்த மிக அற்புதமான அந்தப்பாடல் என் சிந்தனையைக் கவர்ந்திருந்தது அந்நாளில். 

அது சரி. அதை ஏன் இப்போது இங்கே நான் கட்டுரை வடிவத்தில் தருகிறேன் ? என்று வாசகர்களாகிய நீங்கள் உங்கள், புருவங்களை உயர்த்தி என்னைப்பார்த்து கேள்வி எழுப்புவது என்னால் இங்கிருந்தே அறிந்திட முடிகிறது என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

தற்போது தமிழகத்தில் நிலவுகின்ற ஒரு சற்றும்
எதிர்பாராத ஒரு அசாதாரணமான சூழலுக்காக 
நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன் என்று 
உங்களில் யாராவது நினைத்தால் நிச்சயம் அதற்கு நான் முற்றிலும் பொறுப்பல்ல. 

அதற்காக நான் இங்கே கட்டுரை  எழுதிட முன்வரவில்லை. மனித வாழ்வின் 
நிச்சயமற்ற உண்மையை, வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிட வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமில்லை அன்புத்தமிழ் நெஞ்சகளே !!

மறைந்த என் அன்புத் தந்தை அவர் பேசும்போது
தவறாமல் இந்த வாசகங்களை  அடிக்கடி நினைவு படுத்திப் பேசுவது அவரது வழக்கம்.

மனிதன் இருப்பது பொய் !!
அவன் இறப்பது மெய் !!
இந்த பூமியில் நாம் வாழ்ந்து 
மடிந்துபோகும் வரையில், நாலு பேருக்கு நம்மால் முடிந்த அளவு ஏதாவது நன்மை செய்து மறைய வேண்டும் !!.
ஊரை அடிச்சு உலையில் போட்டு பணம் 
சேர்க்கவே கூடாது !!
நாலு பேர் வாயில் நாம் தவறிக்கூட கெட்டபெயர் 
சம்பாதிக்கக் கூடாது !!
உழைத்து பணம் ஈட்ட வேண்டும் !! 
குறுக்குவழியில் பெரும் பணம் கூடிய 
விரைவில் நம்மை அழித்துவிடும் !!

என்றெல்லாம் அறிவுரைகள் சொல்லி சொல்லியே, எங்களை வளர்த்திருந்தார் எங்கள் அன்புத்தந்தை.அந்த எண்ணங்களை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசிவதை தடுக்க இயலவில்லை என்றுசொல்லி,இந்தக்கட்டுரை தனை  நிறைவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.