திங்கள், 28 நவம்பர், 2016
ஒரு ஊரில ஒரு விலைமாது !!
ஒரு ஊரில ஒரு விலைமாது !!
அது ஒரு அழகான பட்டினம். அதில் பலர்,
என அவர்களது கனிவான பார்வையைத்
இவள் யாருக்காக, எந்தத்தலைவனுக்காக
இவன் போனா நமக்கு இன்னொருத்தன் !!இதுதானே வேசிகளின் உயிர்மூச்சு வாடிக்கை, மற்றும் வசனம். அதற்கு தகுந்தால் போல
புரிஞ்சாபுரிஞ்சுக்கோ !! புரியலன்னா அடுத்த ஆளைக்கேட்டு தெரிஞ்சுக்கோ !!என்று சொல்லி நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.
செவ்வாய், 22 நவம்பர், 2016
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை !!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அது 1962ம் ஆண்டு. AVM புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பானுமதி நடிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளைப்படம்
" அன்னை "
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் அமைக்க,
இசையமைப்பு R.சுதர்சனம். அந்தப்படத்தில் என்னைக்கவர்ந்தபலபாடல்கள்இடம்பெற்றிருந்தாலும்,மறைந்த குணச்சித்திர/நகைச்சுவை நடிகர்J.B.சந்திரபாபு,ஆடிப்பாடிநடித்தஇந்தபாடல் மிகவும் என்னால் இரசிக்கப்பட்டதுமேலும்எனது
மனதைத்தொட்டது என்று சொன்னால் அது
மிகையில்லை. இந்தப்பாடலின் வீடியோ பதிவை கீழே குறித்துள்ள வலைதள விபரத்தை தனியாக குறித்து க்ளிக் செய்தால் நீங்களும் பாடலைக் கேட்டு மகிழலாம்.
https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM
பாடல் வரிகள் :-
புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை !!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை !!
( புத்தியுள்ள )
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை !!
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை !!
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் !!
பணமில்லாத மனிதனுக்கு சொந்தமென்றும் துன்பம் !!
( புத்தியுள்ள )
பருவம்வந்தஅனைவருமேகாதல் கொள்வதில்லை !!
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை !!
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை !!
சேர்ந்துவாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை !!
( புத்தியுள்ள )
கனவுகாணும் மனிதனுக்கு காண்பதெல்லாம் கனவு !!
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு !!
அவன் கனவில் அவள் வருவாள் !! அவனைப்பார்த்து சிரிப்பாள் !!
அவள் கனவில் யார் வருவார் ? யாரைப்பார்த்து அழைப்பாள் ?
( புத்தியுள்ள )
************************************************************************************************************
சரிங்க மிஸ்டர் TR பாலு, இப்ப நீங்க எதுக்கு இந்தப்பாட்டை நினைவு படுத்தி எழுதுனீங்க ? அப்டீன்னுதானே நீங்க என்னையப்பார்த்து கேள்வி கேக்குறீங்க ? சொல்றேன்
தெளிவா பதில் சொல்றேன்.
கடந்த 19ம் தேதி நடைபெற்ற தமிழ்நாட்டில் மூன்றும் புதுச்சேரியில் ஒன்றும் ஆக மொத்தம் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே அமோக வெற்றி பெற்றுள்ளது. இது ஒன்றும் புதுமையானதும் அல்ல.இந்த வெற்றி போற்றுதலுக்கு உரியதும் அல்ல. ஆட்சி,
அதிகாரம் உள்ள ஆளும்கட்சிதான் வெல்லும் இது உலகறிந்த உண்மை.
" இடை" யில் நடக்கும்தேர்தலில் ஆள்பவன்தான் (கணவன்)வெற்றிபெற்றுத்தீரவேண்டும்.இல்லை என்றால் அவனது ஆளுகைத்தன்மையில் ஏதோ
கோளாறு என்றுதான் இந்த உலகம் எண்ணும்.
அதுதான் இப்போது இங்கே நடைபெற்றுள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக்கழகத்தைப் பொறுத்தவரையில் அதன் நிறுவனர் பேரறிஞர் அண்ணா, என்ன சொன்னார் ?:-
தம்பி !! தோல்வியைக்கண்டுதுவண்டு விடாதே !!
அதுதான் அடுத்து வர இருக்கின்ற வெற்றியின் முதல்படி !!
என்று. அந்தகருத்தை நமது சிந்தையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து உழைப்போம் மீண்டும் வெற்றி பெறுவோம் ஆட்சியைப் பிடித்து, மக்கள் பணி செய்திடுவோம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
லேபிள்கள்:
அரசியல் அலசல்,
கட்டுரை,
தீர்வு கிடைத்தல்
திங்கள், 14 நவம்பர், 2016
இன்று ரொக்கம் !! நாளை கடன் !!...அந்தக்கால பெட்டிக்கடை வாசகம் !!
இன்று ரொக்கம் !! நாளை கடன் !!
அந்தக்கால பெட்டிக்கடை வாசகம் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்.
என்ன ஆச்சு ? நம்ம மதுரை T.R. பாலுவுக்கு.
மறை கழண்டு போச்சா ? இப்டி சம்பந்தா
சம்பந்தம் இல்லாம ஒரு தலைப்புல இப்டி
ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டாரே என்று
நீங்கள் அனைவரும் உங்களது புருவங்களை
சற்றே உயர்த்திப்பிடித்துப் பார்ப்பதை என்னால்
இங்கிருந்தே அனுமானித்திட முடிகிறது என்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
நான் சிறு பையனாக வாழ்ந்திருந்தபொழுது
பெட்டிக்கடைகளில் தலைப்பினில் குறிப்பிட்டு
இருந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள்
வந்துபோகும் வாடிக்கையாளர்கள் படிக்கும்
வகையில் தொங்கிக்கொண்டு இருக்கும்.
அதை எப்போது படித்தாலும், இன்னைக்கு
ரொக்கம். நாளைக்கு கடன் என்றே நமக்கு
நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.
அது சரிங்க..அத ஏன் இப்போ எழுதுறீங்க ?
உங்களோட கேள்வி நியாயமானதுதான்.
அத நான் இப்போ ஏன் எழுதுறேன்னு கேட்டா
எல்லாம் நமது மத்திய தரைவழிப்போக்குவரத்து
இணைஅமைச்சர் பொறுப்பைவகித்துக்கொண்டு
இங்கே வலம்வந்து கொண்டிருக்கும் நமது
அருமைக்கும் பெருமைக்கும் உரிய அண்ணாச்சி
திரு. பொன்னார்ஜி அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த வருஷம் நாம ஜல்லிக்கட்டு நடத்திரலாம்..நடத்திரலாம்..என்று சொல்வதும் அது நடத்த முடியாம போறதும் திரும்ப அடுத்த ஆண்டு வரும்போது கண்டிப்பா இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உண்டு என்று சொல்வதும், என்னவோ சின்னப்புள்ளைக்கு மிட்டாய்
வாங்கித்தரேன் என்று ஏமாத்துறதுபோலவே இருக்கு.
வரும் 16ம் தேதி நடைபெற உள்ள குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வினில் நிறைவேற்றிடக் காத்திருக்கும் பட்டியலில் ஜல்லிக்கட்டு மசோதா இடம்பெறவில்லை
என்பதை பார்க்கும்போது, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அவர்அறிவிப்பு
" கோவிந்தா !! கோவிந்தாதான் "
என்பது பட்டவர்த்தமாக தெரியவந்துவிட்டது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
இப்ப சொல்லுங்க நீங்க நியாயத்தை !!
நான் கட்டுரைக்கு கொடுத்த தலைப்பு சரியா இல்ல தவறா என்று.
உங்களோடபதிலுக்காகஆவலோடுகாத்துக்கொண்டு இருக்கும்
உங்கள் அன்பன்
மதுரை T.R.பாலு.
நன்றி !! வணக்கம் !!
ஞாயிறு, 6 நவம்பர், 2016
மறைந்த மதுரை மண்ணின் மைந்தர் தீப்பொறியாருக்கு அஞ்சலி !!
தீப்பொறியாருக்கு அஞ்சலி !!
திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னிலை பேச்சாளரும் மதுரை மண்ணில் இயக்கத்தை தனது பேச்சுத்திறமையால் வளர்த்தவருமான தீப்பொறி ஆறுமுகம் நேற்று ( 05-11-216 ) இரவு நம்மை எல்லாம் துன்பக் கடலில் மூழ்கவிட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுரை. T.R.பாலு.
************************************************************************************************************
கண்டங்கள் ஐந்தில் மூன்றெழுத்து கொண்ட ஒரு கண்டம்.
அதில் நான்கெழுத்து கொண்ட ஒரு தீபகற்ப நாடு.
அதன் தென்கடைக்கோடியில் உள்ள மொழியின்
பெயரால் ஐந்து எழுத்துக்கொண்டு அமைந்த ஒரு மாநிலம்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆலயம் மூன்றெழுத்து நகரில் உள்ளது.
அதில் வாழ்ந்திருந்த ஒரு மிகப்பெரிய பேச்சாளர்
பற்றிய வரலாறு இது.
சிவபெருமானின் இளைய புத்திரனின் பெயர் அவருடையது.
அவர் வாழ்ந்திருந்த மாநிலத்தில் ஆளும் அதிகார அமைப்பில் உயர்ந்த பதவியில்இருந்த ஒரு பெண்மணி தனது பெயருக்கு
முன்பாக செல்வி என்ற அடைமொழியை வைத்து அழைக்கப்பட்ட காலம் அது. ஆனால், அவருக்கு திருமணம் எல்லாம் முடிந்தோ அல்லது முடியாமலோ ஒரு பெண் குழந்தை
வேறு உண்டு என்று அந்தப்பெண் வாழ்ந்திருந்த
மாநிலம் முழுவதும் அரசால் புரசலாக பேசப்பட்டதும் உண்டு. இதனால் விசனம் அடைந்த அந்த இயக்கத்தின் முன்னணி பேச்சாளர் சிவபெருமானின் இளைய
புத்திரனின் பெயரைக்கொண்டவர் சார்ந்திருந்த
இயக்கத்தின் மேடையில் பேசுகின்றபோது இந்தப்பெண் செல்வியே அல்ல இவருக்கு குழந்தை ஒன்று உள்ளது எனவே இவர் செல்வி என்று அழைத்திட சற்றும் அருகதை இல்லாதவர் இங்கே எனது பேச்சை இரகசிய குறிப்பு
எடுத்துக்கொண்டிருக்கிற காவல்துறை அதிகார
அமைப்பினர் என்மீது வழக்குப்பதிவு செய்தால்
அதை நிமிர்ந்த நெஞ்சோடு சந்திக்கத்தயார் என்று மார்தட்டி சவால் விடுத்தார் அவர். மறுநாள் காவல் துறை இவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.
நீதிபதி இவரைப்பார்த்து தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விபரம் தங்களுக்குத் தெரியுமா ? ஏன் அப்படி உயர்ந்த பதவியில் உள்ள அந்தப் பெண்மணியைப்பற்றி தாங்கள்
இப்படி அவதூறாக பேசினீர்கள் ? அப்படி பேசியதற்கு தங்களிடம் ஆதாரம் ஏதாவது உண்டா ? விபரமாக தங்களிடம் இருந்து பதிலை இந்த நீதி மன்றம் எதிர்பார்க்கிறது
என்று நீதியரசர் கூறினார்.
உடனே பேச்சாளர் :- கனம்நீதியரசர் அவர்களே !!
நானும் சரி !! நான்சார்ந்திருக்கிறஇயக்கமும்சரி !!
ஆதாரம் இல்லாமல் பேசி பழக்கம் கிடையாது.
செல்வி என்று ஒரு பெண்ணை அழைத்தால் அவள் திருமணம் ஆகாதவள் என்றே பொருள். ஆனால் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட பெண்மணி செல்வி அல்ல இவர் திருமணம் ஆகியோ ஆகாமலோ ஒரு குழந்தைக்கு தாயானவள் என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன் மாட்சிமை பொருந்திய நீதியரசர் அவர்களே !! என்று சொன்னார் பேச்சாளர்.
உடனே அதற்குநீதிபதி :- அதற்கு என்ன ஆதாரம் ?தங்களிடம் அத்தாட்சி ஏதாவது உண்டா ?
பேச்சாளர் :- ஒரு பெண் குழந்தை பெற்றவள் என்பதற்கு ஆதாரம், அத்தாட்சி அந்தப் பெண்ணிடமே இயற்கை அளித்திருக்கிறதே கனம் நீதியரசர் அவர்களே.நான் வேறு தனியாக தர வேண்டுமா ?
நீதிபதி :- புரியும்படியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
பேச்சாளர் :- எந்த ஒரு பெண்ணும் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்ற பிறகு அவளது வயிற்றுப்பகுதிவிரிந்து பிறகு சுருக்கம் பெறுவதால் வரிசை வரிசையாக கோடுகள் அமைந்திருக்கும். நான் இந்த உயர்பதவியில்
உள்ள பெண்ணை இந்தக்காரணத்திற்காகத்தான் இவர் செல்வி அல்ல, திருமதி என்று அழைக்க வேண்டும் என பேச்சில் குறிப்பிட்டு இருந்தேன். என்மீது வழக்கு ஒன்றை பதிவு செய்த காவல்துறையாக இருக்கட்டும் அல்லது
இந்த நீதிமன்றத்துக்கே நான் கூறிய இந்தக் கருத்துக்களை சரிபார்க்க, சோதிக்க, சம்பந்தப்பட்ட உயர்பதவியில் உள்ள
அந்த பெண்ணை ஒரு பெண் மகப்பேறு மருத்துவர் அதுவும் அரசுப்பணியில் உள்ளவர் சோதித்து சான்றிதழ் தரும்போது அதில் உள்ள உண்மை இந்த நீதி மன்றத்திற்கு மட்டுமல்ல
நீதியரசர் அவர்களே, இந்த நாட்டிற்கே தெரிய வரும். இதுதான் எனது பதிலும் தாங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் உண்டான விளக்கமும்.
நீதிபதி :- ( வழக்கைப பதிவு செய்த காவல்துறை உயரதிகாரி அவர்களிடம் ) என்ன சொல்லுகிறீர்கள் ? இவரது கோரிக்கையை
தாங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க உங்களுக்கு கால அவகாசம் அளித்து வழக்கை ஒருவார காலம் நான் ஒத்திவைக்கிறேன்.
அன்பர்களே, இப்போது விஷயம் உயர்பதவியில் உள்ள அந்த பெண்மணியிடம் செல்கிறது. மிகவும் கோபமடைந்த அவரோ யாரைக்கேட்டு இந்த வழக்கை பதிவு செய்தீர்கள். அந்தப்
பேச்சாளர் கூறியபடி மருத்துவப் பரிசோதனை ஏதாவது செய்தால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல நான் இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த விஷயம்
நாடு முழுவதும் தெரிந்து எனது மானம் சந்தி சிரிக்கவா இந்த வழக்கை பதிவு செய்தீர்கள் ? உடனடியாக அந்த வழக்கினை திரும்பப்பெற்று அத்தோடு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று காவல்துறைக்கு கடுமையான உத்திரவு
ஒன்றினை அவர் பிறப்பித்தாராம். ஆனாலும் தன்னை இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த பேச்சாளரின் நாக்கை அறுத்துப்போடுங்கள் என்று கட்சிக்காரர்களுக்கு
உத்திரவிட, இரண்டொரு நாள் கழித்து இந்த பேச்சாளர் அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் முடித்து இரவு வீட்டிற்கு மூன்றுசக்கர மிதிவண்டி
ஒன்றினில் வந்து கொண்டிருந்த போது அந்த மூன்றெழுத்து நகரைச்சேர்ந்த ஆளும் கட்சியின் செல்லமான ராஜாவின் அப்பா பெயரை தனது பெயராகக் கொண்ட நபர் தலைமையில்
ஒரு கூட்டத்தினர் அந்த மிதிவண்டியை வழிமறித்து அவரை தாக்கி பிளேடு கத்தியால் அவரது நாக்கை அறுத்தனர் என்பது வரலாறு.
அதற்காக பேச்சாளரின்நாக்கினை அறுத்த அந்த நபருக்கு அந்த மாநகரத்தந்தை என்ற பதவி பிற்காலத்தில்வழங்கப்பட்டதும் ஒரு வரலாறு.
************************************************************************************************************
புதன், 2 நவம்பர், 2016
கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது !!-( அ.இ.அ.தி.மு.க. விற்கு ஆதரவு அளித்த பி.ஜே.பி யின் செயலால் பாண்டிச்சேரியில் வெளிச்சத்துக்கு வந்தது )
கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது !!
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற
எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
உங்கள் அனைவருக்கும் என் இனிமை
நிறைந்த காலை வணக்கங்கள்.
நேற்றைய தினம் புதுச்சேரியில் நடைபெற
உள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அங்கே தனித்துபோட்டியிட தெம்பு,திராணி,வாக்கு,வகை எதுவும் இல்லாத காரணத்தால், அண்ணா திமுக விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலமாக, இதுவரை நாம் குற்றம் சுமத்தி வந்த இருவருக்கும் உள்ள அந்த " கள்ளத்தொடர்பு " இன்றைக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என்னதான் பொத்திபொத்தி மூடினாலும்
தாழம்பூ மற்றும் பலாச்சுளை இவைகளின்
நறுமணம் வெளியே கசிந்து வந்துவிடும் என்ற
முதுமொழிக்கு இணங்க நேற்றையதினம் அந்த
கள்ளத்தொடர்பு கசிந்து வெளியே வந்துள்ளது
என்கின்றவிஷயத்தைநேயர்களின்கவனத்திற்கு
கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் எப்படி திரைமறைவில் ஆட்சி
அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பேடித்தனமான மோடி அரசாங்கம் அங்கே புதுச்சேரியிலும் தனது அதிகாரத்தை செலுத்த வெக்கம் கெட்ட, மானங்கெட்ட,ரோஷம் எதுவுமே இல்லாத தமிழகத்தை ஆளும் கட்சியான அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அந்த தேர்தல் பணிக்குழுவும் அதனை ஏற்றுக்கொண்டு
உள்ளது எப்பேர்பட்ட மோசடித்தனம் என்பதனை
அங்கே புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு
தொகுதி வாக்காளப்பெருமக்கள்புரிந்துகொண்டு
வாக்களிக்க வேணுமாய்க் கேட்டுக்கொண்டு
இந்த அளவில் விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)