வெள்ளி, 30 செப்டம்பர், 2016

" மரணம் " -- மனிதனால் கண்டு பிடிக்க முடியாத, இறைவன் மட்டுமே அறிந்த ஒரு பரம இரகசியம் !!







                          " மரணம் "




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமையான 
காலை வணக்கங்கள் உரியதாக ஆகட்டும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இன்றையதினம் நாட்டில் மிகப்பெரும்பாலான 
மக்களால் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம்தான் 
அன்பர்களே !!இங்கேகட்டுரைக்குத்தலைப்பாகத் 
தரப்பட்டுள்ளது. ( யாரைப்பற்றி என்பதைஉங்கள் 
சிந்தனைக்கே நான் விட்டுவிடுகிறேன்)

இறைவன்தான் இந்த பூமியைப்படைத்தான்
அதில் உள்ள புல்,பூண்டு.செடி,கொடி,மரம்.
நீர் நிலைகள் இவைகளை படைத்தான் மனித 
இனம் பயனுற என்பது அனைவரும் அறிந்த 
ஒரு விஷயம்தான். அப்படிப்படைக்கப்பட்ட 
இந்த பூமியில் பிறவி எடுத்த மனித இனம் 
அத்தனை வளங்களையும் தனது தேவைகள் 
பூர்த்தி செய்துகொள்ளவே பயன்படுத்தி வரும் 
சூழலில், இங்கே வாழ்ந்துவருகின்ற அத்தனை 
மனிதர்களும்,அவரவர்களுக்குஉரியதுணைக-ளோடு வாழ்ந்து வருகின்ற வேளையில், தங்களுக்கு வாரிசுகள் பிறக்கும் வேளையை க்கூட ஓரளவுக்கு கணிக்கும் அறிவினைத் தந்த பரம்பொருள் என சொல்லப்படும் 

" எல்லாம் வல்ல இறைவன் "

அவரவர்களது மரணம் மட்டும், எப்போது, எங்கே,
எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்கின்ற 
அறிவினை மட்டும் தரவில்லை.  இறைவன் 
ஒரு படைப்பாளி மட்டும் அல்ல. அவன் எல்லாம் 
தெரிந்த ஒரு மாபெரும் அறிவாளியும்கூட.
அதனால்தான் இந்த மரணத்தைப்பற்றிய 
செய்தியை மட்டும் மனிதகுலம் அறிந்து 
கொள்ளாமல் வாழ்ந்திடும் வகையை இங்கே 
மனிதகுலத்திற்கு வழங்கி உள்ளான். 

அப்படி ஒருவேளை இந்த மனிதனுக்கு அப்படிப்பட்ட மரணத்தை அறிந்துகொள்ளும் அறிவினைத் தந்திருந்தால்,மனித வாழ்வே அர்த்தம் இல்லாமல் சுவை இன்றி அவன் வாழ்ந்திடும் காலத்தைப்பற்றிய சிந்தனை செய்வதை விட்டு விட்டு இன்னும் சில ஆண்டுகள்,மாதங்கள்,வாரங்கள் தன்னை 
மரணம் வந்து தழுவிக்கொள்ளுமே என்று 
அந்த ஒரு சிந்தனையில் மட்டுமே இருந்து 
எதற்காக,இறைவனால்படைக்கப்பட்டானோ 
அந்த சிந்தனையே சிதைந்து போய்விடும் 
என்ற ஒரு காரணத்தால் மட்டுமே பரம்பொருள் 
நமக்கு அந்த மரணத்தை பற்றி அறியும் அறிவினை தராமல் படைத்து விட்டான் என்பதே உண்மை.

மனித இனம் மட்டுமே இந்த மரணபயம் என்னும் 
அச்சம் கொண்டு வாழ்கிறது என்பது சத்தியம்.
மற்ற பிற பறவைகள்,விலங்குகள்,மிருகங்கள் 
இவை அனைத்தும் தத்தமது கடமைகளான பசி,
தாகம்,இனப்பெருக்கம் என்ற இந்த மூன்றுக்கு 
மட்டுமே தங்களது வாழ்வினை பயன்படுத்தி 
இருப்பதால்தானோ என்னவோ அதற்கு மரண 
பயம் என்பது இல்லை என்றே நான்கருதுகிறேன்.

ஆனால், மனித இனத்துக்கு இந்த பயம் வந்ததற்கு மூலகாரணமே,சொந்தம்,மனைவி,கணவன்,பந்தங்கள்,குழந்தைகள், தான் சேர்த்து வைத்துள்ள சொத்து,சுகங்கள், ஆஸ்திகள் இவை எங்கே போகும் தனது காலத்திற்குப்பிறகு, என்று பயத்துடன் சிந்தித்து சிந்தித்து வாழ்வதால் மட்டுமே மரணபயம் நம்மில் அனைவருக்கும் ஏற்படுகிறது என்பதை யாராலும் மறக்க,மறுக்க முடியாத உண்மை.

தமிழ் மூதாட்டி தனது பாடலில் :-

பாடுபட்டுத் தேடி பணத்தைப்புதைத்துவைத்த 
கேடு கெட்டமானிடர்காள் !!
கூடுவிட்டு ஆங்காவிதான் போனபின் !!
யாரோ அனுபவிப்பார் பாவிகள் அப்பணத்தை !!

என்று பாடலை எழுதி மனிதர்களுக்கு நல்ல 
ஒரு எச்சரிக்கையைத் தந்து விட்டு சென்றார்.

ஆக, இப்போது நாம் கட்டுரையின் இறுதிப் 
பகுதிக்கு வந்து விட்டோம்.
சேர்த்து வைத்த சொத்துக்கள், சுகங்கள் இவை 
அனைத்தும் எங்கே போகப்போகிறதோ என்ற 
சிந்தனையில், இங்கே மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு உள்ள அனைத்து நபர்களும் 
என்னதான் குன்னக்குடிக்கு அன்னக்காவடி 
எடுத்தாலும், அமெரிக்கா,சிங்கப்பூர் போன்ற 
நாடுகளில் இருந்து புகழ்பெற்ற மருத்துவர்களை 
தனது செல்வம், செல்வாக்கால், வரவழைத்து
பார்த்துக்கொண்டாலும், இறைவன் வகுத்த 
விதியை யாராலும் மீறவோ, மரணத்தைத் 
தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியவே 
முடியாது. நடக்க வேண்டியது நடக்க வேண்டிய 
நேரத்தில் நடந்தே தீரும் அதனை யாரும்எவரும் 
நடைமுறைப் படுத்தியதாக வரலாறே இல்லை.

எல்லாம் அவன் செயல் படி மட்டுமே நடக்கும்!!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன் 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


திங்கள், 26 செப்டம்பர், 2016

விடிஞ்சா கல்யாணம் !! புடி வெத்தல !! பாக்கு !! இது எப்டி இருக்கு ?






விடிஞ்சா கல்யாணம் !! 

புடி வெத்தல !! பாக்கு !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

நமது முன்னோர்கள் அந்தக்காலத்தில் திடீர் 
என்று ஏதாவது காரியம் நடக்க இருக்கிறது 
என்றால் அதற்கு பயன்படுத்திய பழமொழி
இங்கே கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு 
உள்ளது.

சரி. ஏன் அதை இப்போது எழுதுகிறீர்கள் என்று 
கேட்டால் அதற்கு பதில், நமது அரசு உள்ளாட்சி 
மன்றங்களுக்குத் தேர்தல் அறிவிப்பை கடந்த 
ஞாயிற்றுக்கிழமைவெளியிட்டு(அதுவும் மாலை 
வேளையில்), மறுநாள் திங்கள்கிழமை முதல் 
வேட்பு மனு தாக்கல் என அறிவித்திருப்பதை 
தொலைகாட்சி முதல் செய்தித்தாள் வரையில் 
பார்த்து, படித்ததனால் ஏற்பட்ட ஒரு மன உணர்வு, என்னை இந்தக் கட்டுரை எழுதிடத் தூண்டியது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

பொதுவாக, இதுபோன்ற தேர்தல்கள்நடைபெற்ற 
கடந்த காலங்கள் அனைத்திலும் காலஅவகாசம் 
(தேர்தல் அறிவிப்பு முதல் மனுதாக்கல் செய்வது வரை)ஒருமாதமாவது இருக்கும். அப்போதுதான் அந்தந்த அரசியல் கட்சிகள் தத்தமது வேட்பாளர்களைதேர்வுசெய்திடபோதுமானதாக இருக்கும். ஆனால் இந்தமுறை ஏன் அரசாங்கம் இதுபோன்றதொரு நடைமுறைதனை பின்பற்றியது ? என்று கேட்டால் அதற்கு காரணம், எதிர்கட்சிகள் தேர்தலுக்கு சரியான 
வேட்பாளர்களை தேர்வு செய்து வெற்றிபெற்று விடக்கூடாது என்கின்ற பரந்த எண்ணத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் ? சின்னப்புத்தியின் எல்கைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது ஆளும் கட்சியின் 
தலைமைக்கு. இப்படி எல்லாம் அநியாயமாக, அக்கிரமமாக,உள்ளாட்சி மன்றங்களில் இவர்கள் மட்டுமே நின்று வெற்றி பெறுவது எதற்காக ? தூய்மையான மக்கள் பணி செய்திடவா நிச்சயம் இல்லை. ஊரை கொள்ளையடிச்சு இன்னும் 
பல்லாயிரம் கோடிகள் பணத்தை ஸ்வாகா செய்திடவே என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுவதை என்னால் மறுத்துப் பேசிட இயலவில்லை. 

சீப்பை ஒளித்துவைத்து விட்டால் கல்யாணம் நின்னு போயிருமா ?என்ன ? 

 நடக்கட்டும்..நடக்கட்டும்..இன்னும் எத்தனை 
காலம்தான் ஏமாற்றிப் பிழைக்க இருக்கிறார்கள் 
என்பதை நாடும் அறியும். நாட்டு மக்களும் அறிவார்கள்.

அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.

இந்தப் பழமொழிகள் என்றுமே பொய்த்துப் போனதாகவரலாறு இல்லவே இல்லை என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கின்றேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.


நன்றி !!  வணக்கம் !!

அன்புடன்.  மதுரை. T.R. பாலு.