பொக்குவாய்க்கிழவி பொரி மாவை மெச்சிக்கொண்டாளாம் !!
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற
அன்பு உள்ளம் மட்டுமே கொண்டுள்ள எனது
அருமைத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
நேற்றையதினம் சேலம் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகத்தின் 13 வது முதலமைச்சர் (ராசி கெட்ட எண் என்பது வரலாறு)பழனிஆண்டி மன்னிக்கவும்.....பழனிச்சாமி தனது உரையில்,என்ன சொன்னார் என்று கேட்டால் :-
தமிழ்நாட்டில் அனைத்து அரசுப்பணிகளும் எந்தவித தொய்வுமின்றி செவ்வனே நடைபெற்று வருகின்றனவாம்.
இவரே இதுவரை 1௦௦௦ கோப்புகளுக்கும் மேலாக இவரது கைநாட்டினை, மன்னிக்கவும் கையொப்பம் இடப்பட்டு விரைவாக அத்தனை செயல்களும் செயலாக்கப் படுகின்றனவாம். இந்தவிஷயத்தில், எதிர்கட்சிகள் முக்கியமாக, திமுக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறதாம்.
இதை இந்த புத்தர் பெருமானுக்குப் பிறகு பூமியில் அவதரித்த உத்தமர், சத்திய சீலர், இதுவரை யாரிடமும் எவரிடமும் கைநீட்டி பத்து பைசா வாங்காதவர் அப்படிப்பட்ட ஒரு நல்லவர்,வல்லவர், அனைத்து விசயங்களும் கையாள்வதில் பேர் பெற்றவர் தனது
திருவாய் மலர்ந்து அருளி இப்படி ஒரு அப்பட்டமான புளுகு மூட்டை ஒன்றினை கட்டவிழ்த்து பேசி இருப்பது பார்த்தவுடன், கேட்டவுடன், எனது மனதில் உருவான
கருத்துத்தான் இங்கே இந்த கட்டுரைக்கு தலைப்பாகத்தரப்பட்டு உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
பொக்குவாய்கிழவி பொரிமாவை மெச்சிக்கொண்டாளாம்.
இதில் இந்த இராசிகெட்ட அடிமை பேசியதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, நேயர்களாகிய உங்களின் முடிவுக்கே நான் விட்டு விடுகின்றேன்.
உண்மைஎன்னஎன்பதை இந்த உலகம் அறியும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் கவிஞர் மதுரை. TR.பாலு.