சனி, 29 ஏப்ரல், 2017

இருவர்களது கண்களில் மட்டும்வெண்ணை !! மூன்றாவது நபரின்கண்ணில் மட்டும் கந்தக அமிலத்தை தூவுவதேன் ? திரு. நரேந்திரமோடி அவர்களே !! பதில் தேவை !!



இருவர்களது  கண்களில் மட்டும்வெண்ணை !! (OPS+EPS)

மூன்றாவது நபரின்( TTV) கண்களில் மட்டும் மிளகாய்ப் பொடி தூவுவதேன் ?

மத்திய அரசே !!   நமது  இந்தியத் திருநாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே !!

கட்டாயம் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அவசியம் பதில் சொல்லியே ஆகவேண்டும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம் !!.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழ்நாட்டில் நியாயமான முறையில் பிரச்சாரங்கள் செய்துகட்சியை ( பாரதிய ஜனதா) உழைத்து கஷ்டப்பட்டு,வளர்க்க,அதன் வழியாக காலூன்றி நின்று, அரசியல் நடத்திடஇயலாத
(காங்கிரஸ் கட்சி அந்தக்காலங்களில் 1971முதல் இதேபோலத்தான்  செய்து, ஒன்று திமுக இல்லையென்றால் புரட்டு நடிகர் MGR வளர்த்த அஇஅதிமுக என மாறி மாறி அவர்களின் தோள்களில் அமர்ந்து சவாரி செய்து
உழைக்காமல், பிரச்சாரங்கள், கூட்டங்கள்,நல்ல பேச்சாளர்களை உருவாக்கி வளர்த்து அவர்களை வைத்து  கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்தி, செயல்பட்டு கஷ்டப்பட்டு, உழைத்து கட்சியை வளர்க்காததன் விளைவு !!

இன்னைக்கு என்ன ஆச்சு ?

அகில இந்திய அளவிலேயே கட்சி தனது செயல் திறனை இழந்து இன்று இந்தியாவை விட்டே அழிந்து போகக் கூடிய நிலையில் மட்டுமே காங்கிரஸ் கட்சி உள்ளது. அதே நடைமுறையைத் தான் இன்றைய தினம் பி ஜேபி கட்சியும்,உழைக்காமல்,பாடுபடாமல், கூட்டங்கள் நடத்தாமல், கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லாமல் பின்வாசல் வழியாகஎப்படியேனும்ஆட்சிசெய்திட வேண்டும் என்று துடிக்கும் பி.ஜே.பி.யின் அணுகுமுறை, எப்போதும்வெற்றிபெறவே முடியாது.

இலஞ்சம் இலாவண்யம் மட்டுமே செய்து பல காரணங்களால் ஆளும்அஇஅதிமுக கடந்த புரட்டுத்தலைவர் MGR ஆட்சிசெய்த13 ஆண்டுகள்
( 1976-1989) அதன் பிறகு இடையில்கிட்டத்தட்டஇரண்டு ஆண்டுகள்,
(1989-1991) முத்தமிழ்அறிஞர் கழகத்தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி, அது ராஜீவால் அப்போது பிரதமராக இருந்த மறைந்த சந்திரசேகரிடம் உத்திரவு தரப்பட்டு அது ஜெ ராஜீவிடம் ஆணையிட்டு அவரது ஆணைக்கு இணங்க, உத்திரவிற்கு அடிபணிந்த, ( ஏன் ஜெ யின் ஆணை, உத்திரவு, இதற்கு ராஜீவ் சம்மதம் தெரிவிக்க வேண்டும் ? என்ற உங்களது கேள்வி என்னவோ நியாயமானதுதான். அதற்கான விடையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.   அதனை இங்கே எழுதுவது அவை நாகரீகம் ஆகாது. அதனால் விடையை என்னால் எழுதிட இயலவில்லை.) ராஜீவ்காந்தியின் மரணத்தால் அந்த அனுதாப அலையால் ஆட்சியைக் கைப்பற்றிய  MGRன் ஆசை நாயகி"செல்வி" (இதன் பொருள் என்னவென்றால் திருமணம்ஆகாதவர்,குழந்தை பெறாதவர் என்று பொருள். ஆனால்இது உண்மையா? இல்லையா ? என்பது சம்பந்தப்பட்டமறைந்த ஜெ யின் மனசாட்சி, மற்றும் நடைபெறும் அத்தனை
நிகழ்வுகளையும் விண்ணுலகிலிருந்து பார்த்துக்கொண்டுஇருக்கும் இறைவன் ஒருவனும் மறைந்த தெலுங்கு திரையுலகின்
முன்னணி நடிகர் சோபன்பாபு,உட்பட அனைவருமே  அறிவார்கள் )

இந்த புரட்டுத்தலைவி ஜெயலலிதா ஆட்சி புரிந்து, அதன் காரணமாக அதுவரை  தலை நிமிர்ந்து அதுவரை வாழ்ந்திருந்த தமிழ் நாட்டை
இவர் ஆட்சி செய்து பாழடித்து, சீரழித்து, தனது வருமானம், நிர்வாகத்தின் மூலமாக எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, இலஞ்ச இலாவண்ய,ஊழல் முறைகேடுகள் வாயிலாக சொத்துக்கள், சுகங்கள், ரொக்கப் பணங்கள் என இந்திய நாட்டின்  தலைமை வங்கியான ரிசர்வ் வங்கிக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கோடானு கோடிகள்  சேர்த்துக் குவித்த, தான்
ஆட்சி செய்த ( 1991-1996, 2001-2006, 2011-2016, 2016 ல் 6 மாதங்கள் என கிட்டத்தட்ட  29 ஆண்டுகள்இந்த தமிழகத்தை, அதன் வளத்தை, நலத்தை,
வருமானத்தை,செல்வ சுகங்களை, கொள்ளையடித்த கும்பல்கள் மட்டுமே
இன்று இரண்டு,மூன்று,நான்கு என்று குழுக்களாக, பிரிந்துஅதிகார போட்டி
நடத்திக்கொண்டு, யார்கொள்ளைக்கூட்டத்திற்கு தலைவராக இருப்பது ?
இதில்தான் இவர்கள் கவனம் இன்றையதினம் சென்று கொண்டிருக்கிறதே ஒழிய,தமிழ் நாட்டின் எந்தமுன்னேற்றப் பணிகளிலும் இவர்கள் இதுவரை ஈடுபட்டதாக எந்த( அது  OPS ஆகட்டும் அல்லது EPS ஆகட்டும் ) வரலாறு
என்பது இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

கடிக்க வருகின்ற நாய்களின் கூட்டத்திற்கு (வாக்களிக்கும் மக்கள்)ஒரு சில சூப்பிப்போட்ட எலும்புத்துண்டுகளை ( வாக்கிற்கு
பணம், பிரியாணி பொட்டலம்,குவார்ட்டர் பாட்டில்,சேலை துணிமணி
எவர்சில்வர் பித்தளை பாத்திரங்கள் என)வீசி எறிந்து விட்டு தமிழ்நாடுமுழுவதையுமே கொள்ளையடித்து குவித்த பணங்களை, மறைந்த தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த செல்வி ( அப்படி அழைப்பது தவறு)
ஜெ மற்றும்அவரது " ஆருயிர்த் தோழி "- ( இந்த இரு வார்த்தைகளுக்கு
வாசகர்களாகிய நீங்கள் என்ன பொருள் வேண்டுமானாலும், எப்படி அர்த்தங்கள் எடுத்து உரைத்தாலும் அது, உங்களது தனிப்பட்ட கருத்து.
அதில் தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை) திருமதி சசிகலா அவர்களும்இணைந்து,சேர்ந்து,கூட்டுக்கொள்ளை அடித்து குவித்து வைத்திருந்த   கொடநாடு தேயிலைத்தோட்ட அரண்மனையில்,
பதுக்கி வைத்திருந்த பல்லாயிரம் கோடிகள் ரொக்கப் பணமாக,தங்கநகைகளாக, சொத்துப்பத்திரங்களாக, இன்னும் இத்யாதி இத்யாதி குறிப்பிட்டுத்தான் எழுதிட வேண்டுமென்றால், அதற்கு இந்த நாளும்
போதாது,இடமும்பத்தாது....................................................


(தொடரும்)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். கவிஞர் மதுரை. T.R.பாலு.