புதன், 20 ஆகஸ்ட், 2014
கண் திறக்குமா ? -- கவின் தமிழக அரசு !!
கவின் தமிழக அரசு !!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தன்னுடைய
இறுதித்தீர்ப்பினை வழங்கி விட்டது.
13,5௦௦ மக்கள் நலப்பணியாளர்களது
மேல்முறையீட்டு மனுவின்மீது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம்
தேதிக்குள்ளாக, அந்த மக்கள் நலப்
பணியாளர்கள் 13,5௦௦ பேர்களுக்கும்
இப்போது காலியாக இருக்கும் அரசுப்
பணிஇடங்களில் ( கடந்த நிதிநிலை
அறிக்கையின்போது அறிவித்தது )
அவர்களைப் பணியமர்த்திட வேண்டும்.
தவறினால் அவர்கள் அனைவருக்கும்
எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல்
ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும்
ஆணை பிறப்பித்து விட்டது. இப்போது
நமது கவின் தமிழக அரசாங்கம் என்ன
செய்யப்போகிறது என்று மாநிலம்
முழுக்க உள்ள என்னைப்போன்ற
அரசியல் ஆர்வலர்கள் காத்துக்கொண்டு
இருக்கிறோம். இந்த விஷயத்தினை
ஒரு கௌரவப் பிரச்சினையாக அரசு
எடுத்துக்கொள்ளாமல், கருணை மிகுந்த
அடிப்படையில் அவர்களுக்கு வேலை
வழங்கி அவர்களை பெருமைப்படுத்தினால்
அது அவர்களுக்கு எதிர்வரும் 2௦16ம் ஆண்டு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது
பேருதவியாக இருக்கும் என்றே நாங்கள்
கருதுகிறோம். அப்படி இல்லாமல் அரசாங்கம்
உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு,
அப்படி, இப்படி, என்று போனால், அவர்களுக்கு
கெட்டநேரம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று நாம்
நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இப்படித்தான் நடைபெறும் என்றே அனேகர்
இப்போதிருந்தே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஏன் என்றால், இங்கேஆணவமும்அகம்பாவமும்
மட்டும்தானே இங்கே தலைமைப் பீடத்தில்
ஆட்சி செய்து கொண்டிருப்பதாக அவர்கள்
பேசிக்கொள்வது எனது காதுகளில் விழாமல்
இல்லை என்பதை நான் ஆழ்ந்த வருத்தத்துடன்
இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டு உள்ளேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
( +917708666289)
கண் திறக்குமா ? கவின் தமிழக அரசு !!
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இன்றுமுதல் புதியதாக ஒரு
வலைதளம்
"அரசியல் மேடை"
நடுநிலை சார்ந்தது !!
என்ற தலைப்பினில் உங்களது
கண்களுக்குவிருந்தாக வெளிவரக்
காத்துக்கொண்டிருக்கிறது.
படித்து இன்புற வேண்டுகிறேன்.
உங்களது பதில்களை எனது
கீழ்க்கண்ட மின்-அஞ்சலில்
பதிவு செய்திட வேண்டுகிறேன்.
astrobalu1954@gamil.com
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் அரசியல் ஆர்வலர்
மதுரை T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)