வெள்ளி, 28 நவம்பர், 2014

இன்றளவும் தொடர்கிறது இனிய இராமாயண சரிதம் !! ஒரு கண்ணோட்டம் !!







பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!




அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை 


வணக்கம்.  அன்று வால்மீகி முனிவரால் 


எழுதப்பட்ட சரிதம்தான் " இராமாயணம் ".


அதில் வருகின்ற அனைத்து சம்பவங்களும் 


இன்றளவும் தொடர்கின்றது என்பதுதான் 


நமது இன்றைய கட்டுரையின் தலைப்பாக 


உங்கள் அனைவருக்கும் நான் தருகிறேன்.



அதில் ஸ்ரீ இராம பிரானின் தர்ம பத்தினியான  


ஸ்ரீசீதாதேவி, இலங்கை மன்னன் இராவனேஸ்


-வரனால் கவர்ந்து இழுக்கப்பட்டு கடத்தப்பட்ட 


சம்பவம் இன்றளவும் தொடர்வதை நாம் 


ஆங்காங்கே கண்டும் கேட்டும் வருகிறோம்.  



அழகாக ஒரு பெண் பிறந்து வளர்ந்து விட்டால் 


போதும். அவளை கடத்தி சுகம் அனுபவிப்பதற்கு 


என்றே ஒரு சமூக விரோதக் கும்பல் 


அங்கிங்கெனாதபடி, எங்கும் ஒவ்வொரு சந்து 


பொந்து, மூலை முடுக்குகளிலும் நடந்து 


வருகிறதை நாம் பார்த்து வருகிறோம்.


அது போலவே மூத்தவன் இராமன் இருக்கும்


போதே அவனது தம்பி பரதனுக்குபட்டாபிஷேகம் 


செய்து வைக்கப்பட்டதனை நாம் இராம 


காவியத்தில் படித்தோம்.


அதே நிலைதான் இன்றளவும் நமதுதமிழகத்தில் 


நடைபெற்றுவருவதைப் பார்த்து வருகிறோம்.


கலைஞரின் மூத்த புதல்வன் திரு அழகிரி 


இருக்கும் போதே அவரது தம்பி திரு மு.க. 


ஸ்டாலின் அவர்கட்கு பதவி தந்து அதனைஅழகு 


பார்க்கும் தலைவராகவே/தந்தையாகவே  


கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஈடுபட்டு 


வருவதை நாம் பார்க்கின்றோம்.



எனவே கட்டுரையின் தலைப்பினில் 


குறிப்பிட்டுள்ள கருத்தினைப்போல இன்றளவும் 


தொடர்கிறது இனிய இராமாயண சரிதம் 


என்பதில் உண்மை என்பது இல்லாமல் 


இல்லை.



சிந்திப்போம் !! செயல்படுவோம் !!



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக